24.6.10

டாக்டர் ஸாகிர் நாயக் பிரிட்டன் நுழைவு தடைக்கு சவால் !


சர்வதேசரீதியாக ஜனரஞ்சகமாக மதங்களுகிடையிலான உறவு மற்றும் ஒப்பீட்டு ஆய்வுகள் மூலம் பிரபல்யமான பேச்சாளரான ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்தது.

 இதை தொடர்ந்து அந்த தடையை சட்டரீதியாக எதிர்கொள்ள ஸாகிர் நாயக் பிரிட்டனில் மிக சிறந்த சட்ட ஆலோசகர்கள் , மற்றும் சட்டத்தரணிகள் மூலம் நுழைவு தடையை நீக்க தேவையான நடவடிகளைகளை மேற்கொண்டுவருகின்றார்.

 தான் என்ன காரனங்களுக்காக பிரிட்டனுக்குள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டேன் என்பதை இந்திய தொலைகாச்சி ஒன்றுக்கு கடந்த 19 ஆம் திகதி வழகிய பேட்டியில் இரண்டு காரணங்களை கூறியுள்ளார்.

 ஒன்று இஸ்லாம் பிரிட்டனிலும் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளிலும் வேகமாக பரவிவருவதை சகிக்கமுடியாமை இரண்டாவது அரசியல் ரீதியாக பிரிட்டன் பயங்கரவாதத்துக்கு எதிரானது என்பதை காட்டுவதாகும் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

.