14.6.10

லால்பேட்டையில் அரசினர் மகளிர் கல்லூரி முஸ்லிம் லீக் நன்றி

லால்பேட்டை நகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பொதுக்குழுக் கூட்டம் 10-6-2010 அன்று லால்பேட்டை மெயின் ரோடு பள்ளிவாசல் பெண் கள் மதரஸாவில் நடை பெற்றது. நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.ஏ. முஹம்மது தலைமை வகித்தார். இளைஞர் அணி அமைப் பாளர் ஏ. நூருல் அமீன் திருக்குர்ஆன் வசனம் ஓதினார். நகரச் செயலாளர் எம்.ஓ. அப்துல் அலி வரவேற்றுப் பேசினார்.




மாவட்டத் தலைவர் எஸ்.ஏ. அப்துல் கப்பார், நகர துணைத் தலைவர் எஸ்.ஏ. அப்துல் ஜமீல், மாவட்ட துணைச் செயலா ளர் கே.ஏ. அமானுல்லா, மெயின்ரோடு பள்ளிவாசல் முத்தவல்லி டி. முஹம்மது அய்யூப், முபாரக் மஸ்ஜித் முத்தவல்லி எஸ்.எச். அப் துஸ் ஸலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



மாநிலச் செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான், நகர துணைச் செயலாளர் கள் ஏ. தாஹா முஹம்மது, ஏ. முஹம்து தய்யிப் முஹிப்பி, லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் ஏ.ஆர். சபியுல்லா, ஏ. உபைதுர் ரஹ்மான் ஆகி யோர் கருத்துரை - வாழ்த் துரை வழங்கினர்.



கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் கள் -



கோவையில் நடை பெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில்- தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் கட்டளைப் படி அதிக அளவில் பங்கேற்பது எனவும், லால்பேட்டை நகரின் அரசினர் மகளிர் கல்லூரி அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதுடன், அமைத்து தரவேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றித் தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீ னுக்கு நன்றி தெரிவித்தும், லால்பேட்டை பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்பு விறுவிறுப்புடன் துரிதப் படுத்துவது என்றும், மக்கள் தொகைக் கணக் கெடுப்பின்போது, அதிகாரிகளுக்கு ஒத்து ழைப்பு வழங்கி பணியை சிறப்பிப்பது என்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கூட்ட துவக்கத்தில் சமீபத்தில் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கடலூர் மாவட்ட துணைத் தலைவர் ஏ.எம். முஹம்மது, ஃபாரூக் ஹாஜியாரின் மறைவுக்கு இரங்கல் தெரி வித்து அன்னாரின் மறுமை வாழ்வின் உயர் வுக்காக துஆ செய்யப்பட்டது.

0 comments:

.