7.6.10

காயிதே மில்லத் 115 வது பிறந்த நாள் முதல்வர் கலைஞர்,தலைவர் பேராசிரியர் பங்கேற்ப்பு!

கண்ணியத்திற்க்குரிய காயிதே மில்லத் அவர்களின் 115 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரின் நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் மலர் போர்வை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்க்க வந்த தமிழக முதல்வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயளாலரும் தமிழக தலைவருமான பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம்.காதர் மொய்தீன்,மாநில பொதுச் செயளாலர் கே.ஏ.எம்.அபூபக்கர்,நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான்,சட்ட மன்ற உறுப்பினர் ஹெச்.அப்துல் பாஸித்,உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் வரவேற்றனர்.


தமிழக முதல்வர் மலர் போர்வை போர்த்திய உடன் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மார்க்க அணிச் செயளாலர் தளபதி மெளலவி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் துஆ ஓதினார்.

இநிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்,மத்திய அமைச்சர் திரு தயாநிதி மாறன்,தமிழக செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு பரிதி இளம் வழுதி,விளையாட்டு மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான்,சட்டமன்ற நாடாளு மன்ற உறுப்பினர்கள்,மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

0 comments:

.