8.6.10

லால்பேட்டை ஹாஜி முஹம்மது பாருக் மரைவு

லால்பேட்டை வடக்கு தெரு  அபாபில்லை ஹாஜி முஹம்மது பாருக்  அவர்கள் இன்று 08.06.2010 மாலை 5 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


ஜனாஸா நல்லடக்கம் 09.06.2010 காலை 9 மணிக்கு நடைபெறும்.
 
 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இரங்கல்:
 
லால்பேட்டை வடக்கு தெரு ஏ.எம்.முஹமத் பாரூக் ஹாஜியார் இன்று 5 மணியளவில் காலமானார் ( இன்னா லில்லாஹி ........) மறைந்த இவர் தென்னாற்காடு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவராகவும் ,லால்பேட்டை நகர பொருளாளராகவும் நிண்ட காலங்கள் பணியாற்றியுள்ளார் மற்றும் லால்பேட்டை ஜெ.எம்.ஏ.அரபிக் கல்லூரி பொருளாளராகவும் லால்கான் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி யாகவும் மகத்தான முறையில் பணியாற்றியுள்ளார் இவரின் மறைவு செய்தி அறிந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம் .காதர் மொகிதீன்,இரங்கல் தெரிவித்துள்ளார்.




இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சேவையிலும் லால்பேட்டை யிலுள்ள மஸ்ஜித்களின் பணிகளிலும் சிறப்பான சேவை யற்றியுள்ளார் இவரின் மறைவு சமுதாயத்திற்கும் லால்பேட்டைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்

2 comments:

lalpetpost.blogspot.com said...

அன்னாருக்கு ஜன்னத்துல் ஃபிர்தெளஸை வழங்க அனைவரும் பிரார்த்திப்போம்!
ஏ.எஸ்.அப்துல் ரஹ்மன்,
அபுதாபி.

Mohamed G said...

ஈடு செய்ய முடியாத பேரிழப்பு,அவர்களின் குடும்பத்தார்களுக்கு சாந்தியையும்,சமாதானத்தையும்,ஆண்டவன் அருள்வானாக ஆமீன்.
அவர்களை நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்க்க இறைவனிடம் துவாச்செய்கின்றோம்.
தன் வாழ்நாள் முளுதும் இறைப்பணியில் ஈடுபட்டு வந்தார்,யாரும் எளிதில் மறக்க முடியாதவர்.
அன்னாரின் இழப்பால் வாடும் குடும்பத்தருடன்,நாங்களும் இணைகின்றோம்.
ஆமீன்,ஆமீன்,ஆமீன்.

ஜியா மற்றும் குடும்பத்தார்கள்.

.