9.6.10

லால்பேட்டையில் அரசினர் மகளிர் கலை கல்லூரி துவக்க வேண்டும்...

கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் 09-06-2010 இன்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.கதர்மொய்தீன் அவர்கள் தலமையில் நடைபெற்றது.

மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் மத்திய இரயிவே இணையமைச்சர் மாண்புமிகு ஈ.அஹமது,தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு,முஸ்லிம் லீக் அகில இந்திய பொருளாலர் தஸ்தகீர் இப்ராஹிம் ஆகா,டெல்லி குர்ரம் அனீஸ் உமர்,நாடாளுமன்ற உருப்பினர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான்,தமிழ் நாடு மாநில பொதுச் செயளாலர் கே.ஏ.எம்.அபூபக்கர்,சட்டமன்ற உறுப்பினர்கள் கலீலுர் ரஹ்மான்,அப்துல் பாஸித் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்ற இம்மாநாட்டில்,

கல்வி மற்றும் பல்வேறு துறை சம்மந்தமாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் ஒரு முக்கிய தீர்மானமாக தமிழகத்தில் பெரும்பானமையான முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி உறுவாக்கித்தர வேண்டும் என்று தமிழக அரசை வலியுறித்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானம் நிறைவேற்ற முக்கிய காரணமாகத் திகழ்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்களுக்கும் மெளலானா தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் அவர்களுக்கும் மாநில பொதுச் செயளாலர் கே.ஏ.எம்.அபூபக்கர் அவர்களுக்கும் லால்பேட்டை இணைய தளம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

2 comments:

Unknown said...

alhamdulillah.very importent for our lalpet girls students,we shuld thank to IUML.also we need to follow this issue with IUML leaders.insha allah it will be passible in futer.

Mohamed G said...

அவசியத்தேவை,
முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

.