.

Thursday, November 5, 2009

லால்பேட்டை ஜாமி ஆ பேராசிரியர் மறைவுக்கு இரங்கல்...

அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......

த‌மிழக‌த்தின் ப‌ழம்பெரும் அர‌புக்க‌ல்லூரிக‌ளில் ஒன்றான‌ லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் க‌ல்லூரியின் முதுபெரும் பேராசிரிய‌ரும், அக்க‌ல்லூரியில் பல்லாண்டுகளாக மார்க்க‌ச் சேவை ஆற்றியவ‌ருமான‌ மவ்லானா மெளலவி அல்ஹாஜ் வஜ்ஹுல்லாஹ் ஹஜ்ரத் அவர்கள் இன்று (புதன் கிழமை 04.11.2009) காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் அப்ப‌‍ழுக்க‌ற்ற‌ மார்க்க‌ச் சேவையை அ‍ங்கீக‌ரித்து, நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) & ரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை பிரார்த்தனை செய்கிறது.

உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி!
வஸ்ஸலாம்!!

Monday, October 26, 2009

லால்பேட்டை அப்துல்லாஹ் ஹஜ்ரத் மறைவுக்கு முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.கே இரங்கல்!

சென்னை,அக்,26
லால்பேட்டை நகர முஸ்லிம் லீகின் முதுபெரும் தலைவராகவும்,ஜெ.எம்.ஏ.அரபிக்கல்லூரியின் நீண்ட கால உருப்பினராகவும்,காயிதே மில்லத் சாலையில் அமைந்துள்ள முபாரக் மஸ்ஜிதை நிர்மாணித்தவர்களில் ஒருவருமாக விளங்கிய மொளலவி அல்ஹாஜ் அப்துல்லாஹ் ஹஜ்ரத் அவர்களின் மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் இரங்கல்.
.

முஸ்லிம் லீக் தலைவராக விளங்கிய ஜின்னா சாஹிப் பங்கேற்ற மாநாட்டில் கலந்துக் கொண்ட பெருமைக்குரிய ஆலிம் அவர்கள் தன் தள்ளாத வயதிலும் முஸ்லிம் லீக் பொன்விழா மாநாட்டிலும் பங்கேற்று ஊர்வலத்தில் கொடி பிடித்து வந்த நிகழ்ச்சி மறக்க முடியாதது,அதைப்போலவே அன்னாரின் மறைவுச் செய்தியும் அதிர்ச்சிக்குரியது.
.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொருத்து அவர்தம் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை வழங்க பிரார்த்திக்கிறேன்.

மேற்கண்டவாறு தலைவர் தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Thursday, October 22, 2009

லால்பேட்டையில் அ.தி.மு.க., ஆண்டு விழா பொதுகூட்டம்

லால்பேட்டையில் அ.தி.மு.க., ஆண்டு விழா பொதுகூட்டம் நடந்தது.குமராட்சி ஒன்றியம் சார்பில் லால்பேட்டையில் நடந்த கூட்டத்திற்கு நகர தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.

பேரவை இணை செயலாளர் இளஞ்செழியன், கீழக்கரை செல்வம், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் வீரமணி, ஜெயமணி , பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மூசா வரவேற்றார்.

மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன், தலைமை கழக பேச்சாளர் கரியப்பட்டி ராமநாதன் பேசினர்.மாவட்ட அவை தலைவர் பெருமாள், பேரவை செயலாளர் மாரிமுத்து, காட்டுமன்னார்கோவில் ஒன்றிய பேரவை செயலாளர் முருகுமாறன், நகர செயலாளர் எம்.ஜி.ஆர் தாசன், சிவக்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

ஒன்றிய செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார்.

Wednesday, October 21, 2009

லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா காட்சிகள்.


மாணவ மாணவிகள் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சி.

விழா மேடையில் அப்துல் ரஹ்மான் எம்.பி,கே.ஏ.எம்.அபூபக்கர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள்.


கலை நிகழ்ச்சியை ரசிக்கும் சிறப்பு விருந்தினர்கள்.



நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகள்

சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளியின் தாளாலர் எஸ்.ஹாரிஸ் அஹமது,தலைவர் எஸ்.ஜாஃபர் அலி,நிர்வாகக் குழு உறுப்பினர் இஸட்.முஹம்மது யஹ்யா ஆகியோர் நினைவு பரிசு வழங்கும் காட்சி.



சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்ட முஸ்லிம் லீக் பாராளுமன்ர உறுப்பினர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. முஸ்லிம் லீக் பொதுச் செயளாலர் கே.ஏ.எம்.அபூபக்கர் ஆகியோருக்கு சால்வை அணிவிக்கப்படுகிறது.



மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

Tuesday, October 20, 2009

லால்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சமுக விழிப்உணர்வு பொதுக்கூட்டம்


கடலூர் மாவட்டம் லால்பேட்டை யில் 18.10.09 ஞாயிறு அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சமுக விழிப்உணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்... மாவட்ட தலைவர் மூசா தலைமை தாங்கினார் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்



இதில் மாநில செயலாளர் அப்துல் ரஜாக் அவர்கள் (சமுக நலன்) என்ற தலைப்பிலும், மாநில செயலாளர் கோவை ரஹமதுல்லாஹ் அவர்கள் (சீரழிவிலிருந்து சமுதாயம் சீர்பெறவேண்டும்) என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள், இப்பொதுக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பெறும் திரளாக கலந்துகொண்டனர்.


இதில் கிழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
தீர்மானங்கள் 1. லால்பேட்டை சிதம்பரம் மெயின் ரோட்டில் உள்ள திருபந்துருத்தியை சேர்ந்த அப்துல் பஷீர் என்பவரின் கபர்-ரை அகற்றும் வழக்கு-ணை துரிதபடுத்தவேண்டியும் கபர்-ரை வசிக்கும் இடத்திலிருந்து அகற்றவேண்டியும் இப்பொதுக்கூட்டம் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. லால்பேட்டை-யில் பெரும்பான்மையான பெண்கள் படித்து வருவதினால் உடனடியாக அரசு மகளிர் உயர் நிலை பள்ளி ஏற்படுத்த வேண்டும்.
3. லால்பேட்டை-யில் அரசு உயர் நிலை மருத்துவமனை அமைகவேண்டியும் கேட்டுகொள்ளபட்டது.

Thanks: Raisudeen

லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிகழ்வுகள்:

மாலை மூன்று மணி முதல் லால்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாவட்ட நிர்வாகிகளும்,தொண்டர்களும் குவியத்தொடங்கினர். ஆய்வு மாளிகை வளாகத்திலேயே மாவட்ட முஸ்லிம் லீகின் கலந்தாய்வுக் கூட்டம்,பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ்.எம்.அப்துல் ரஹ்மான் சாஹிப்,மாநில பொதுச் செயளாலர் ஹாஜி கே.ஏ.எம்.அபூபக்கர்,மார்க அணிச் செயளாலர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத் தலைவர் ஹாஜி.எஸ்.ஏ.அப்துல் கஃப்பார்,மாவட்டச் செயளாலர் ஏ.சுக்கூர்,ஆகியோரின் ஒருங்கிணைப்பில் கடலூர்,விருதாச்சலம்,சிதம்பரம், லால்பேட்டை,பரங்கிப்பேட்டை,மங்கலம்பேட்டை,நெல்லிக்குப்பம்,ஆயங்குடி,முட்லூர்.பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் நிர்வாகிகளும்,பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டு ஆலோசனைகளை பரிமாரிக் கொண்டனர்.மாலை ஐந்து மணிவரை இக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பிறைக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி ஊர்வலத்துடன் துவங்கியது இதில் இளைஞர்கள்,மாணவர்கள்,பெரியவர்கள் என்று பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். லால்பேட்டை நகரில் அமைந்துள்ள முக்கிய இடங்களில் தாய்ச்சபை முஸ்லிம் லீகின் நட்சத்திரம் பதித்த பச்சிளம் பிறைக் கொடியை,முஸ்லிம் லீகின் அரசியல் ஆலோசனைக்குழு உருப்பினர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான்,பொதுச் செயளாலர் கே.ஏ.எம் அபூபக்கர் ஆகியோர் ஏற்றிவைத்தனர். நிறைவாக சிதம்பரம் மெயின் ரோட்டில் அமைந்திருந்த சிராஜுல் மில்லத் நினைவரங்கில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெற்றது.நகரத் தலைவர் ஹாஜி.கே.ஏ.ஜி.முஹம்மது தலமை வகித்தார்.ஹாஃபிழ் முஜீபுர் ரஹ்மான் கிராஅத் ஓதினார்.மாவட்ட துணைச் செயளாலர் ஹாஜி கே.ஏ.அமானுல்லாஹ் வரவேற்று பேசினார். கடலூர் மாவட்டத் தலைவர் அல்ஹாஜ்.எஸ்.ஏ.அப்துல் கஃப்பார் துவக்கவுரையாற்றினார்.கடலூர் மாவட்டச் செயளாலர் ஏ.சுக்கூர்,திருவாரூர் மாவட்டச்செயளாலர் ஹாஜி எம்.எம்.ஜலாலுத்தீன்,விழுப்புரம் மாவட்டச் செயளாலர் ஏ.அன்வர் பாஷா,மாவட்ட பட்டதாரிகள் அணி அமைப்பளர் ஏ.ஏ.ரஷீத் ஜான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநில மார்க்க அணிச் செயளாலர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான்,மாநில பொதுச் செயளாலர் ஹாஜி கே.ஏ.எம் அபூபக்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியாக அனைத்துலக காயிதே மில்லத் பேரவையின் அமைப்பாளரும்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக்குழு உருப்பினர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.நிறைவுப் பேருரையாற்றினார்.



கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஹாஜி கமாலுத்தீன்,மாவட்ட பொருளாலர் ஹாஜி ஏ.கே.ஹபீபுர் ரஹ்மான்,மாவட்ட துணைச் செயளாலர் வி.எம்.ராஜா ரஹீமுல்லாஹ்,சிதம்பரம் எம்.ஏ.ஜெகரிய்யா,நெல்லிக்குப்பம் ஹஜி அப்துல் ஹாதி,கடலூர் அக்பர் அலி,முட்லூர் அப்துல் கஃப்பார்,பரங்கிபேட்டை முஹம்மது பஷீர்,அயங்குடி அப்துல் வதூத்,முஹம்மது இக்பால்,ஹாஜி முஹம்மது இப்ராஹிம்,விருதாச்சலம் ஹாஜி அப்துல் மஜீத்,லியாகத் அலி, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளானோர் பங்கேற்ற்னர்.இறுதியில் நகர துணைச் செயளாலர் யூ.சல்மான் ஃபாரிஸ் நன்றி கூறினார்.





நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாட்டை எம்.ஓ.அப்துல் அலி,பி.எம்.தய்யிப்,எம்.ஜெ.மஸூத் அஹமத்,பி.எம்.அப்துல் காதர்,சாதுல்லாஹ்,மொளலவி நூருல் அமீன்,ஜாகிர் ஹுஸைன்,மற்றும் மெயின் ரோடு கவ்சரியா பைத்துசபா அங்கத்தினர்கள்,முஹப்பத் இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.







லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா!

இருபதாம் ஆண்டைநோக்கிச் செல்லும் லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா திறந்த வழி மைதானமான குத்பா பள்ளி திடலில் அமைந்துள்ள ஹாஜி.ஃபஜ்லுத்தீன் நினைவரங்கில் காலை 10 மணிக்கு துவங்கியது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் முன்னாள் தாளாலர் ஹாஜி ஜாஃபர் அலி தலமை வகித்தார். பள்ளியின் தாளாலர் இளவல் எஸ்.ஹாரிஸ் அஹமது வரவேற்று பேசினார். பொருளாலர் ஹாஜி ஜெகரிய்யா ஆண்டரிக்கை வாசித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயளாலர் ஹாஜி.கே.ஏ.எம்.அபூபக்கர்,மாநில மார்க்க அணிச் செயளாலர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான்,கவிஞர் பி.எம்.நஜீர் அஹமத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஹாஜி எம்.ஏ.முஹம்மது ஹஸன் அறிமுகவுரையாற்றினார். பள்ளியின் மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி இறுதியாக சிறப்பு விருந்தினர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாடுகளை எம்.இஸட். முஹம்மது யஹ்யா,ஹாஜி முஹம்மது இப்ராஹிம், அஹமதுல்லாஹ்,உள்ளிட்ட முஸ்லிம் பட்டதாரிகள் சங்கத்தினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.முடிவில் பள்ளியின் முதல்வர் மாரியப்பன் நன்றி கூறினார்

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template