24.6.10

பிறைமேடை மாதமிருமுறை இதழின் செம்மொழி மாநாடு சிறப்பிதழ் வெளியீட்டு விழா

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை சார்பில் வெளிவரும் பிறைமேடை மாதமிருமுறை இதழின் செம்மொழி மாநாடு சிறப்பிதழ் வெளியீட்டு விழா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸிலில் 22.6.2010 செவ்வாய் மாலை 5 மணிக்கு நடைபெற்றது.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் தலைமை தாங்கினார், மாநில ஆலிம் அணி அமைப்பாளர் மௌலவி ஹாமித் பக்ரீ கிராஅத் ஓதினார், முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில் வரவேற்புரையாற்றினார். முஸ்லிம் லீக் பொருளாளர் வடக்குகோட்டையார் வி.எம். செய்யது அகமது வாழ்த்துரை வழங்கினார்,


முதல் பிரதியை மெஜஸ்டிக் அறக்கட்டளை நிறுவனர் கே.வி.எம்.அப்துல் கரீம் வெளியிட எஸ்.டி. கூரியர் நிர்வாக இயக்குனர் கே. நவாஸ்கனி பெற்றுக் கொண்டார்.

முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை மேலாளர் எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கீ நன்றியுரையாற்றினார். கூட்டத்தில் மாநில இளைஞரணி அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன், காஞ்சி மாவட்ட செயலாளர் கே.எஸ்.தாவ+த், திருவள்ளுர் மாவட்ட செயலாளர் சிக்கந்தர் பாஷா, தேனி மாவட்ட செயலாளர் சாயபு, மற்றும் மாநில மாவட்ட, பகுதி பிரைமரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


பிறைமேடை மாதமிருறை இதழின் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. சிறப்பு மலருடன் முதல் பிரதியை வெளியிட்ட மெஜஸ்டிக் அப்துல் கரீம், அதை பெற்றுக் கொண்ட எஸ்.டி.கூரியர் நவாஸ்கனி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட நிர்வாகிகள்.

0 comments:

.