22.7.10

லால்பேட்டை ஜாமி ஆ மன்பவுல் அன்வார் முன்னால் செயளாலர் ஹாஜி அப்துல் லத்தீப் மறைவு

லால்பேட்டை மெயின்ரோட்டில் வசிக்கும் அல் நூர் டிராவல்ஸ் உரிமையார் முஹம்மது அவர்களின் தந்தையும் ஜாமி ஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரியின் முன்னால் செயளாலரும் மெயின்ரோடு பள்ளிவாசல் முன்னால் முத்தவல்லியும் அல் பரகத் டிராவல்ஸ் உரிமையாளருமான கருத்தார் லப்பை ஹாஜி அப்துல் லத்தீப் அவர்கள் இன்று 22.07.2010 மாலை 6.30  மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

1 comments:

Mohamed G said...

குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.அன்னாருக்காக துவா செய்கின்றோம்.
ஆமீன்.
ஜியா குடும்பத்தார்கள்.

.