14.11.08

சவூதி அரேபியா நாட்டில் எழுத படிக்கத் தெரியாத வெளிநாட்டவர்கள் வேலை செய்ய தடை

சவூதி அரேபியா நாட்டில் எழுத படிக்கத் தெரியாத வெளிநாட்டவர்கள் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

படிப்பறிவில்லாத வெளிநாட்டவர்களுக்கு வேலை கொடுக்க கூடாது என்றும் அங்குள்ள நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைக்கு உள்துறை மந்திரியும், இளவரசருமான பிக்அப்துல்லா ஒப்புதல் அளித்துள்ளார்.

சவூதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிக்கிக் கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத வெளிநாட்டவர்கள் என்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

படிப்பறிவில்லாத அப்பாவி வெளிநாட்டு தொழிலாளர்களை சில கும்பல் குற்றச் செயல்களில் ஈடுபடுத்துவதை தடுக்கவே இந்த நடவடிக்கை.
.

0 comments:

.