21.9.09

ஈத் பெருநாளை முன்னிட்டு லால்பேட்டை நகர முஸ்லிம் லீக் சார்பில் கொடியேற்று விழா!!

லால்பேட்டை,செப்,21
லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஈத் பெருநாளை முன்னிட்டுகாலை சுப்ஹு தொழுகைக்குப் பின் காயிதே மில்லத் சாலை,புது பஜார் சந்திப்பில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் எஸ்.ஏ.அப்துல் கப்பாஃர் தலமை வகித்தார்.மாவட்ட முஸ்லிம் லீக் துணைச் செயளாலர் ஹாஜி கே.ஏ.அமானுல்லாஹ்,பேரூராட்சி மன்ற தலைவர் ஹாஜி ஏ.ஆர்.சபியுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி கே.ஏ.முஹம்மது கொடியை ஏற்றி வைத்தார்.

மாநில மார்க்க அணிச் செயளாலர் மொளலவி தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் நகர துணைச் செயளாலர் பி.எம்.தய்யிப்,எம்.ஓ.அப்துல் அலி,ஜெ.மஸ்ஊத் அஹமத்,ஜாஃபர் அலி,அபுதாபி காயிதே மில்லத் பேரவை உறுப்பினர் என்.ஹெச்.முஜீபுர் ரஹ்மான்,பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஹிதாயத்துல்லாஹ்,இளைஞரணி செயளாலர் சல்மான் ஃபாரீஸ், முஸ்லிம் லீக் பதிப்பகக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,சாதுல்லாஹ்,அப்துஸ் ஸலாம்,துணைச் செயளாலர் ஜெகரிய்யா,மொளலவி எஸ்.ஏ.நூருல் அமீன்,ஃபலுலுல்லாஹ்,அப்துல் காதர்,ஜாகிர் ஹுஸைன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

0 comments:

.