20.9.09

லால்பேட்டையில் கல்லூரி மாணவர்கள் நடத்திய இஃப்தார் ஏராளமானோர் பங்கேற்ப்பு !!

லால்பேட்டை,செப்,19
லால்பேட்டை ஜெ.எம்.ஏ.அரபிக் கல்லூரி திருமண மண்டபத்தில் இமாம் கஸ்ஸாலி பள்ளியின் முன்னாள் மாணவர்களான தற்போதய கல்லூரி மாணவர்கள் இணைந்து இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயளாலர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான்,ஜெ.எம்.ஏ கல்லூரி பேராசிரியர் மொளலவி வி.ஆர்.அப்துஸ் ஸமத் ,ஆகியோர் உரையற்றினார்கள்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் ஏ.ஆர்.சபியுல்லாஹ் , மொளலவி பி.எஸ்.அப்துல் அலி ,இமாம் கஸ்ஸாலி முன்னாள் தாளாலர் ஹஜி முஹம்மது இப்ராஹிம்,தற்பொழுதய தாளாலர் எஸ்.ஹாரிஸ் அஹமத், பொருளாலர் எம்.ஜகரிய்யா,மொளலவி ஜஹிர் ஹுஸைன், ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி ஹஜி முஹம்மது யஹ்யா,கவிஞர் பி.எம்.நஜீர் அஹ்மத்,மொளலவி முஹம்மது ஃபாரூக்,அபுதாபி அய்மான் சங்க செயளாலரும்,முஸ்லிம் லீக் பதிப்பகக் குழு உருப்பினருமான ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,த.மு.மு.க.நகரத் தலைவர் எஸ்.ஏ.யாசிர் அரபாஃத், மற்றும்,கல்வியாளர்கள்,சமுதாய பிரமுகர்கள்,பல்வேறு அமைப்புக்களைச் சார்ந்த இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

0 comments:

.