24.9.10

’விடியலை நோக்கி’ சிந்தனையாளர் பேரவையின் சார்பில் சென்னையில் கருத்தரங்கம்

சென்னை : சென்னையில் தேசிய சிந்தனையாளர் பேரவையின் சார்பில் 21.09.2010 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு தேவ நேயப்பாவணர் நூலக அரங்கில் ’விடியலை நோக்கி’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.


கார்த்தி சிதம்பரம்,கே.எஸ். அழகிரி, டாக்டர்.அமீர் ஜஹான்,

கருத்தரங்கிற்கு தேசிய சிந்தனையாளர் பேரவை தலைவர் உ. நீலன் தலைமை வகித்தார். செயலாளர் ஏ. காந்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.

டாக்டர்.அமீர் ஜஹான்,கார்த்தி சிதம்பரம்,பேரவை தலைவர் உ. நீலன்

இக்கருத்தரங்கில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். அழகிரி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம்,

 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான {லால்பேட்டை வம்சாவலியான} முதுகுளத்தூர் டாக்டர் அ. அமீர் ஜஹான் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



நிகழ்வில் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

0 comments:

.