9.10.09

இடைத்தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி வெற்றி!

லால்பேட்டை பேரூராட்சி மூன்றாவது வார்டுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலையில் துவங்கியது.

மொத்தம் பதிவான வாக்குகள் 187 இதில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் எஸ்.ஏ.யாசிர் அரஃபாத் 102 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசிய லீக் வேட்பாளர் சிராஜுத்தீனை விட கூடுதலாக 17 வாக்குகள் பெற்றார்.

வெற்றிபெற்ற யாசிர் அரஃபாத்துக்கு மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். தனக்கு வாக்களித்த வாக்களர்களுக்கும்,வெற்றிக்காக உழைத்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தார்.

0 comments:

.