2.3.09

2007-2008-ம் ஆண்டில் சிறந்த பேரூராட்சியாக லால்பேட்டை பேரூராச்சி தேற்வு ஆட்சியர் பாராட்டு

கடலூர், பிப். 28: கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய பேரூராட்சிகளை, ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.
ஆட்சியர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை நிறைவேற்றுவதில் 2007-08-ம் ஆண்டில் சிறந்த பேரூராட்சிகளாக லால்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சிகள், சென்னை போரூராட்சிகளின் ஆணையரால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அவற்றுக்கான பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர், லால்பேட்டை பேரூராட்சித் தலைவர் பி.இம்தாதுல்உசேன், மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சித் தலைவர் வி.ஜெயமூர்த்தி மற்றும் பேரூராட்சிகளின் அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கிப் பாராட்டினார்.

திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்திய தொரப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் ராம்குமாருக்கு, பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
.

0 comments:

.