31.8.09

லால்பேட்டை அல்ஜமா பைத்துல்மால் ஜகாத் பற்றிய ஓர் அறிவிப்பு







லால்பேட்டை நகர த மு மு க சார்பில் இஃப்தார் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்ப்பு!!!

லால்பேட்டை நகர த மு மு க சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஜெ.எம்.ஏ திருமண மண்டபத்தில் இன்று 30.08.2009 நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகரத் தலைவரும்,ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினருமான ஏ.யாசிர் அரஃபாத் தலமை வகித்தார்,

நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்,நகர செயளாலர் முஹம்மத் ஆஷிக் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன்,ஆய்வாளர் கோடீஸ்வரன்,துணை ஆய்வாளர் செந்தில் வினாயகம் மற்றும்,த மு மு க ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,தேசிய லீக், தி மு க ,ஐக்கிய ஜமாத் மற்றும் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

முடிவில் மாவட்ட மருத்துவ அணி செயளாலர் நூருல் அமீன் நன்றி கூறினார்.






தகவல்:அப்துல் ரஹ்மான்

28.8.09

லால்பேட்டை ஒல்லி ஹாலிது வஃபாத்

லால்பேட்டை தட்டால் தெரு ஒல்லி ஹாலிது அவர்கள் இன்று (28:08;2009) இரவு 07 மணி அளவில் தாருல் பனாவை விட்டு தாருல் பக்காவை அடைந்து விட்டார்கள் இன்னாலில்லாஹி வாஇன்னாலில்லாஹி ராஜிஊன்




தகவல் நூருல் அமீன்

27.8.09

லால்பேட்டை சல்மாபிவி வஃபாத்

லால்பேட்டை மெயின் ரோடு மர்ஹூம் முஹம்மது நூரு அவர்களின் மனைவியும் அசாபில்லை ஹலீல் அஹ்மது மாமியாருமான சல்மாபீவி அவர்கள் 27.8.2009 காலை 3.00மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸ நல்லடக்கம் 1 30 மணிக்கு நடைப்பெற்றது.


தகவல்:நூருல் அமீன்

17.8.09

லால்பேட்டை பேருராட்சி மன்றத்தில் சுதந்திர தின விழா

லால்பேட்டை பேருராட்சி மன்றத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பேருராட்சி மன்றத்தலைவர் எ.ஆர்.சபியுல்லா துணைத்தலைவர் எம்.ஏ.காஜாமைதின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் மௌலான தளபதி ஷபிகுர் ரஹ்மான் பேருராட்சிமன்ற செயல் அலுவலர் கஸ்நபர் அலிகான் மற்றும் மன்ற உறுப்பினர்கள் ஜமாஅத் பிரமுகர்கள்



7.8.09

வரதச்சனை ஒழிப்பு மற்றும் மார்க்க விளக்க பொதுகூட்டம்




காட்டுமன்னர்குடி முஸ்லிம் தெருவில் தமிழ்நாடு தவ்ஹித ஜமாத் சார்பாக 02.08.09 அன்று மாபெரும் வரதச்சனை ஒழிப்பு மற்றும் மார்க்க விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது.தலைமை மாவட்ட பொருளாளர் ஹாஜி அலி,முன்னிலை நகர : நிர்வாகிகள் .பஜூலுல்லஹா தலைப்பு :இறைவனின் நினைவில்லையா?
சிறப்புரை :அப்துர் ரஜ்ஜாக் (மாநில செயலாளர்) தலைப்பு: வரதச்சனை ஒர் வன் கொடுமை
சிறப்புரை : அப்துர் ரகுமான் பிர்தொவ்சி (மாநில பெச்சலாளர்) தலைப்பு : சூடான மௌலுதும் சுவையான பாத்தியாயும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

29.7.09

லால்பேட்டை சின்னையா ஹஸன் வஃபாத்

லால்பேட்டை அமானி வீதி சின்னையா ஹஸன் அவர்கள் 29.7.2009 இன்று தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


தகவல்:

நூருல் அமீன்

26.7.09

லால்பேட்டை கோசி அப்துல் ஹமிது வஃபாத்

லால்பேட்டை தெர்கு தோப்பு சுலைமான் சேட்வீதி கோசி ஹாஜி முஹம்மது யூசுப் அவர்களின் மகனும் இலண்டனில் வசிக்கும் சாதுல்லா ,இலியாஸ் ஆகியோரின் மச்சனுமாகிய அப்துல் ஹமீது அவர்கள் இன்று 26.07.2009 மதியம் 1.30 மணியவில் மஸ்கட்டில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்

லால்பேட்டை சிராஜுத்தின் மற்றும் அவர் மனைவி சாஜாத் விபத்தில் மரணம்

லால்பேட்டை ஜுலை 26,




லால்பேட்டை வண்ணான் தெரு சிரஜுத்தின் மற்றும் அவர் மனைவி சாஜாத் ஆகியோர் விருத்தாசலம் அருகில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளாகி தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இனலில்லாஹி வா இன்ன இலைஹி ராஜிஊன், இவர்கள் ஸ்கூல் தெரு முத்துறார் ஜாபர் அலி , முஹம்மது ஹனீப் ஆகியோரின் மச்சானும் சகோதரியுமாவார்கள், இவர்களின் ஜனாஸா நல்லடக்கம் நாளை 27.07.2009.திங்கள் மாலை நடைபெறும்,

12.7.09

லால்பேட்டையில் நினைவு நாள் கொண்டாடுவது குறித்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்

லால்பேட்டை ஜுலை.12- கடலூர்மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் மறைந்த பைஜி ஷா நூரி என்பவரின் நினைவு நாளையொட்டி உரூஸ் திருவிழா கொண்டாடுவது தொடர்பாக கடந்த ஆண்டு இருதரப்பினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

அதைதொடர்ந்து இந்த ஆண்டு விழாவை அமைதி யான முறையில் நடத்துவது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் ஜமாத் சார்பில் பத்தாவுதீன், அகமதுல்லா, அப்துல் ஹமீது,அகது, ஜியாவுதீன் மற்றும் பலரும், விழா குழு சார்பில் அப்துல்லா பைஜி, ரகமத்துல்லா பைஜி, நூருல்லா பைஜி,கைïப், முஸ்தபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சிதம்பரம் ஆர்.டி.ஓ.ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் படி விழாவை சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும் விழாவிக்குழுவினர் வீட்டுக்கு வெளியேபோட்டுள்ள கொட்டகையை பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.அதனை ஏற்ற விழாக்குழுவினர் கொட்டகையை பிரித்து கொள்ள சம்மதம் தெரிவித்து சென்றனர்.
Thanks

28.6.09

லால்பேட்டை முஹம்மது ஹுஸைன் வஃபாத்

லால்பேட்டை வடக்கு தெரு [ சேக்ஹுசேன் ] முஹம்மது ஹுஸைன் அவர்கள் 28.6.2009 இன்று தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

25.6.09

லால்பேட்டை முஹம்மது ஹனீப் வஃபாத்

லால்பேட்டை தெர்கு தெரு மர்ஹும் லப்பை முஹம்மது தாஹிர் சகோதரரும் நூருல்லாஹ்,கலிமுல்லஹ் ஆகியோரின் சிரிய தந்தையுமான முஹம்மது ஹனீப் அவர்கள் 23.6.2009 மாலை 6.00மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


ஜனாஸ நல்லடக்கம் பேரனாம்பட்டு { வேலூர் } நடைப்பெற்றது

16.6.09

இன்னும் சற்று நேரத்தில் தமுமுகத்தலைவர் Dr,Pro,M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இலண்டனிலிருந்து நேரடி உரை!

15.6.09

லால்பேட்டை ஹபிபுல்லா மனைவி உம்முல் ஹாதி வஃபாத்

லால்பேட்டை புதுப்பள்ளிவாசல் தெரு சட்டி J.M. ஹபிபுல்லா மனைவி உம்முல் ஹாதி அவர்கள் இன்று 15.6.2009 மாலை 4.00மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

12.6.09

லண்டனில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கிளை துவக்கம்

தமிழக அளவில் இரத்ததான முகாம்கள், கண்சிகிச்சை முகாம்கள், கல்விச் சேவைகள், இலவச மருத்துவ முகாம்கள், அவசர ஊர்தி அர்பணித்தல், சுனாமி நிவாரணப் பணிகள் என்று தமிழகத்தில் பரவலாக அனைத்து சமூக மக்களுக்கும் கடந்த 14 வருடங்களாக சேவை செய்து வருகின்றது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.

இந்த அமைப்பின் கிளைகள் தமிழகம் மட்டுமில்லாது இந்திய எல்லையைத் தாண்டி கிழக்காசிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் பிரிட்டன் வந்துள்ள த மு மு க தலைவர் Dr, M.H. ஜவஹிருல்லாஹ் லண்டனில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். இந்த அமைப்பின் கிளை துவக்குவது சம்மந்தமாக பல்வேறு மக்களை சந்தித்து ஆலோசனை செய்துவருகின்றார்.

11.6.09

வரலாற்று சாதனை புரிந்தது TNTJ மாணவர் அணி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவரணி ஓர் ஆண்டில் மட்டும் (28/05/08 to 31/05/09 - 53 வாரங்கள்) தமிழகத்தில் 80 இடங்களில் 113 கல்வி கருத்தங்குகளை நடத்தி சரித்திரம் படைத்துள்ளது.

தமிழகத்தில் எவ்வளவோ முஸ்லீம் அமைப்புகள் , கல்வி அறக்கட்டளைகள் இருந்தும் நமது சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்காக எந்த முயற்ச்சியும் எடுக்கவில்லை. காரணம் கல்வி அறக்கட்டளைகள் நடத்தும் இவர்கள் கல்வி சேவைக்காக அறக்கட்டளைகள் நடத்தாமல் காசு சம்பாதிக்க அறக்கட்டளை நடத்துகின்றனர். இவர்கள் கல்வி நிறுவனங்களை நிருவி சிறுபாண்மை கல்வி நிறுவனம் என்று அரசாங்கத்திடம் இருந்து சலுகைகளை பெற்றுக் கொண்டு ஏழை முஸ்லீம் மாணவர்களுக்கு உதவாமல், கல்வியை வியாபாரமாக்கி முஸ்லீம்களிடமே ஒரு சீட்டுக்கு இலச்சகணக்கில் கொள்ளை அடிக்கின்றனர்.

இவர்களால் அடித்தட்டு முஸ்லீம் மாணவர்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இதுவரை கல்வி செவையில் ஈடுபட்டவர்கள் வயதானவர்களாக இருந்த காரணத்தினாலும், தவ்ஹீத் இல்லாமையும், பெருமை, புகழ் விரும்பும் மனப்பான்மையும் பெரிய அளவில் இவர்களால் எதுவும் செய்ய இயலாமல் போனது.இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முஸ்லீம்களுக்கு கல்வியில் வழிகாட்ட மாணவரணியை நிறுவி, கல்வி விழிப்புணர்வு பிராசாரத்தை மாநிலம் முழுவதும் முடுக்கிவிட்டது.

இதனால் தவ்ஹீதை ஏற்ற படித்த இளைஞர்கள் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் தமிழகம் முழுவதும் இடைவிடாமல் அடித்தட்டு முஸ்லீம் மக்களின் கல்வி வளர்ச்சிகாக அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கொட்டும் மழையையும் , கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வுடைய மிகப்பெரிய கிருபையால் ஒர் ஆண்டில் மட்டும் 80 இடங்களில் 113 கல்வி கருத்தங்குகளை நடத்தி உள்ளனர். இதுவரை எந்த முஸ்லீம் இயக்கமும் செய்திறாத சாதனையை நமது TNTJ மாணவரணி செய்துள்ளது. தவ்ஹீதை உயிர் மூச்சாக கொண்டவர்களால் மட்டுமே இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டம் முடியும் என்பதை மீண்டும் நிருபித்துள்ளது,தவ்ஹீத் தங்களின் வளர்சிக்கு தடையாக உள்ளது என்று கூறியவர்களால் இதை சாதிக்க முடியவில்லை.( ஓட்டும் வாங்க முடியவில்லை).

இந்த கல்வி சேவையில் ஈடுபட்டவர்கள் தவ்ஹீத்வாதிகளாக இருப்பதினால்தான் உலக ஆதாயம் கருதாமல் மறுமை வெற்றி மட்டுமே குறிக்கோளக கொண்டு வேகத்தோடும் , வீரியத்தோடும் இத்தகைய சாதனைகளை புரிய முடிந்தது,கல்வி சேவையோடு, முஸ்லீம் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் த்மிழகத்தில் 120 -க்கும் மேற்பட்ட இடங்களில் மாணவரணியை வழுப்படுத்தி உள்ளனர்.

முஸ்லீம்களை வைத்து உலக ஆதாயம் தேட முயலும் போலி முஸ்லீம் அமைப்புகளை மாணவர்களும் இளைஞர்களும் புறகணித்து இம்மை மறுமைக்கும் வழிகாட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவரணியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். தமிழக முஸ்லீம் இளைஞர்களின் ஒட்டு மொத்த சக்த்தியாக நமது மாணவரணி உருப்பெற்றுள்ளது..

நமது மாணவரணி வரும் ஆண்டுகளில் கல்வி சேவையை தமிழகத்தின் அனைத்து கடை கோடி முஸ்லீம்களுக்கும் சென்றடையும் வகையில் தனது செயல்பாடுகளை பண்மடங்காக பெருக்க திட்டமிட்டுள்ளது இன்ஷா அல்லாஹ். நமது மாணவரணியின் சேவை இன்னும் சிறக்க அல்லாஹ்விடம் துவா செய்யுமாரு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

S.சித்தீக்.M.TechTNTJ மாணவரணி,

கல்வி கருத்தரங்குகள் நடைபெற்ற 80 இதாங்கள்.

வட சென்னை மாவட்டம்
1. நேதாஜி நகர்
2. ஏழுகினறு
3. மண்ணடி
தென் சென்னை மாவட்டம்
4. திருவல்லிகேணி
5. ஜாம்பஜார்
6. சேப்பாக்கம்
7. தரமணி
காஞ்சி (மேற்கு) மாவட்டம்
8. தாம்பரம்
9. பல்லாவரம்
10. குன்றத்தூர்
11.. காஞ்சிபுரம்
12. உத்திரமேரூர்
13. பீக்கங்கரனை
14. காமராஜபுரம்
15. ரங்கநாதஜபுரம்
காஞ்சி (கிழக்கு) மாவட்டம்
16. கல்பாக்கம்
17. கானத்தூர்
18.. செங்கல்பட்டு
19. கூடுவாஞ்சேரி (வள்ளளார் நகர்)
திருவள்ளுர் மாவட்டம்
20. பட்டாபிராம்
21. அரக்கோணம்
22. மதுரவாயல்
23. அம்பத்தூர்
கடலூர் மாவட்டம்24. மேல்பட்டம் பாக்கம்
25. பரங்கி பேட்டை
விழுப்புரம் மாவட்டம்
26. திண்டிவணம்
வேலூர் மாவட்டம்
27. பேரணம்பேட்
28. வேலூர்
திருவன்ணாமலை மாவட்டம்29. வந்தவாசி
கிருஷ்ணகிரி மாவட்டம்
30. ஓசூர்
நாமக்கல் மாவட்டம்
31. நாமக்கல்
தர்மபுரி மாவட்டம்
32. தர்மபுரி
தஞ்சாவூர்(வடக்கு) மாவட்டம்
33. கும்பகோணம்
34. வழுத்தூர்
35. கதிராமங்களம்
36. சோழபுரம்
37. ஆவூர்
தஞ்சாவூர்(தெற்கு) மாவட்டம்
38. பட்டுகோட்டை
திருவாரூர் மாவட்டம்39. திருவாரூர்
40. முத்துபேட்டை
நாகை(வடக்கு) மாவட்டம்
41. அரசூர்
42. துளசேந்திரபுரம்
நாகை(தெற்கு) மாவட்டம்
43. நாகபட்டினம்
44. நாகூர்
திருச்சி மாவட்டம்
45. சிங்காரதோப்பு
பெரம்பலூர் மாவட்டம்46. லெப்பைகுடி
காடுபுதுக்கோட்டை மாவட்டம்
47. புதுகோட்டை
48. அம்மாபட்டினம்
49. அறந்தாங்கி
இராமநாதபுரம் மாவட்டம்
50. இராம்நாட்
51. கீழகரைசி
வகங்கை மாவட்டம்
52. திருப்பத்தூர்
53. காரைகுடி
54.. இளையான்குடி
55. புதுவயல்
கோவை மாவட்டம்
56. போத்தனூர்
57. ஆனைமலை
58. ஆசாத் நகர்
59. பொள்ளாச்சி
திருப்பூர் மாவட்டம்
60. திருப்பூர்
61. மங்களம்
ஈரோடு மாவட்டம்
62. தாராபுரம்
63. ஈரோடு
சேலம் மாவட்டம்64. சேலம்
மதுரை மாவட்டம்
65. காய்தேமில்லத் நகர்
66. அவனியாபுரம்
67. வில்லாபுரம்
தேனி மாவட்டம்
68. கம்பம்
திண்டுக்கல் மாவட்டம்
69. பேகம்பூர்
விருதுநகர் மாவட்டம்
70. விருது நகர்
71. அருப்புகோட்டை
நெல்லை மாவட்டம்
72. மேலப்பாளையம்
73. பாளையங்கோட்டை (ரஹ்மத் நகர்)
தூத்துக்குடி மாவட்டம்
74. செய்யுதுங்க நல்லூர்
75. ஆராம்பன்னை
76. தொங்கராங்குறிச்சி
குமரி மாவட்டம்
77. தக்கலை
பாண்டிசேரி
78. சுல்தான்பேட்டை
காரைகால்
79. காரைகால்
80. TR பட்டினம்

10.6.09

இஸ்மாயில் மனைவி மெஹராஜ் பேகம் வஃபாத்

லால்பேட்டை தெற்கு தோப்பு சைலப்பை இஸ்மாயில் மனைவி மெஹராஜ் பேகம் இன்று 10.6.2009 மாலை 6.00மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


தகவல்:



O.PJ.நூருல் அமீன்



அல் அய்ன்

9.6.09

துபை ஈமான் அமைப்பு வேலூர் பாராளுமன்ற உறுப்பினருக்கு ந‌ட‌த்தும் வாழ்த்த‌ர‌ங்க‌ம்

துபை ஈமான் அமைப்பு இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக்கின் வேலூர் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மானுக்கு வாழ்த்த‌ர‌ங்க‌ம் நிக‌ழ்ச்சியினை 11.06.2009 வியாழ‌க்கிழ‌மை மாலை ச‌ரியாக‌ 9.30 ம‌ணிக்கு தேரா லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் ( குவைத் ப‌ள்ளி ) ந‌டத்த‌ இருக்கிற‌து என‌ பொதுச்செய‌லாள‌ர் ஏ. லியாக்க‌த் அலி தெரிவித்தார்.

இவ்வாழ்த்த‌ர‌ங்கம் நிக‌ழ்விற்கு ஈமான் அமைப்பின் த‌லைவ‌ர் அல்ஹாஜ் செய்ய‌து எம். ஸலாஹுத்தீன் த‌லைமை தாங்க‌ இருக்கிறார்.

இந்நிக‌ழ்வில் த‌மிழ‌க‌த்தின் அனைத்துப் ப‌குதியினைச் சேர்ந்த‌ ஜ‌மாஅத்துக‌ளின் நிர்வாகிக‌ள் க‌ல‌ந்து கொண்டு வாழ்த்துரை வ‌ழ‌ங்க‌ உள்ள‌ன‌ர். அத‌னைத் தொட‌ர்ந்து வேலூர் எம்.பி. எம். அப்துல் ர‌ஹ்மான் ஏற்புரை நிக‌ழ்த்துகிறார்.

இந்நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை ஈமான் அமைப்பின் விழாக்குழுவின‌ர் செய்து வ‌ருகின்ற‌ன‌ர். மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு ஈமான் அமைப்பின் ஜ‌மாஅத் ஒருங்கிணைப்பாள‌ர் கீழ‌க்க‌ரை ஹ‌மீது யாசின் 050 2533712 எனும் அலைபேசியில் தொட‌ர்பு கொண்டு விப‌ர‌ம் பெற‌லாம்.

மின்ன‌ஞ்ச‌ல் : iman1976@emirates.net.ae
இணைய‌த்த‌ள‌ம் : www.imandubai.org / http://indianmuslimassociation.blogspot.com/

7.6.09

பாறாளுமன்ற உறுப்பினருக்கு யு எ இ லால்பேட்டை நண்பர்கள் வாழ்த்து!

துபை வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர் , அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் அவர்களை ஈ டி ஏ அஸ்கான் இல்லத்தில் முஸ்லிம் லீக் பதிப்பகக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,லால்பேட்டை இளைஞரணி செயலாளராக பணியாற்றிய என்.ஹெச்.முஜீபுர் ரஹ்மான்,மாணவரணி துணை அமைப்பாளராக பணியாற்றிய எஃப்.முஹம்மது ஃபைசல்,எம்.கிஃபாயத்துல்லாஹ் ஆகியோர் நேரில் சந்தித்து சல்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இச்சந்திப்பின் போது அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் அல்ஹாஜ்.லியாகத் அலி,துணைச் செயலாளர் ஹமீதுர் ரஹ்மான்,ஊடகத்துறை பொருப்பாளர் முதுவை ஹிதாயத்,ஹமீத் யாசீன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



6.6.09

இஸ்லாம் கூறும் மனித உரிமைகள் லண்டனில் M.H. ஜவாஹிருல்லாஹ் சிறப்புரை

.