12.7.09

லால்பேட்டையில் நினைவு நாள் கொண்டாடுவது குறித்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்

லால்பேட்டை ஜுலை.12- கடலூர்மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் மறைந்த பைஜி ஷா நூரி என்பவரின் நினைவு நாளையொட்டி உரூஸ் திருவிழா கொண்டாடுவது தொடர்பாக கடந்த ஆண்டு இருதரப்பினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

அதைதொடர்ந்து இந்த ஆண்டு விழாவை அமைதி யான முறையில் நடத்துவது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் ஜமாத் சார்பில் பத்தாவுதீன், அகமதுல்லா, அப்துல் ஹமீது,அகது, ஜியாவுதீன் மற்றும் பலரும், விழா குழு சார்பில் அப்துல்லா பைஜி, ரகமத்துல்லா பைஜி, நூருல்லா பைஜி,கைïப், முஸ்தபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சிதம்பரம் ஆர்.டி.ஓ.ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் படி விழாவை சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும் விழாவிக்குழுவினர் வீட்டுக்கு வெளியேபோட்டுள்ள கொட்டகையை பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.அதனை ஏற்ற விழாக்குழுவினர் கொட்டகையை பிரித்து கொள்ள சம்மதம் தெரிவித்து சென்றனர்.
Thanks

2 comments:

Anonymous said...

உங்கள் ஊர் செய்திகளை அப்டேட் செய்வதில் என்ன தயக்கம் சகோ.அபூஅத்தியா அவர்களே...!!!

இப்படிக்கு"

"என்னத்த சொல்றது" - எஹையா

Anonymous said...

இஸ்லாத்தில் உண்டா உரூஸ் வைபவம். நபி(ஸல்) அவர்களுக்கு உண்டா நினைவு நாள் கொண்டாட்டம்...

.