கடலூர் துறைமுகம் ஓ.டி. பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளை மாவட்டச் செயலாளர் சேக் தாவூது, நகர பொருளாளர் அஷ்ரப் ஆகியோர் தலைமை யில் தமுமுகவினர் செய்து வருகின்றனர்.
லால்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர் மழை யின் காரணமாக வீடுகளையும் உடைமை களையும் இழந்து வெள்ளத்தில் தத்த ளித்த மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து உணவு, மருத்துவம், அத்தியாவசியத் தேவைகள் செய்து கொடுக்கப்பட்டது.
நிவாரணப் பணியில் தமுமுகவினர் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ் வழியே வந்த உள்ளாட்சித் துறை அமைச் சர் மு.க.ஸ்டாலின் தனது வாகனத்தை நிறுத்தச் சொல்லி தமுமுக நிவாரண முகாமைப் பார்வையிட்டு, தமுமுகவினர் தயாரித்த உணவை ருசி பார்த்து “உணவு நன்றாக உள்ளது. சிறப்பாக செயல் படுங்கள்’’ என்று உற்சாகமூட்டிச் சென் றார்.
அவரிடம் தமுமுகவினர் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவில், “லால் பேட்டை மற்றும் கொல்லிமன கீழ்பாதி, கொல்லிமன மேல்பாதி, வ.குளக்குடி, ஜாகிர் உசேன் நகர், ரஹ்மத் நகர் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் வீடு, உடமைகளை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு உடனே நிவாரணம் வழங்குமாறு லால்பேட்டை தமுமுக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது’’

எள்ளேரியில் சுமார் 1500 நபர்களுக் கும், ஆயங்குடியில் சுமார் 1000 நபர்களுக்கும் உணவு, பால், மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. தமுமுக மாவட்டத் தலைவர் ஜின்னா தலைமையில் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
Thanks TMMK
0 comments:
Post a Comment