31.12.08

லால்பேட்டை ஹாஜி { மாமாங்கனி }முஹம்மது யூசுப் வஃபாத்

லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் முதல்வர் மெளலவி ஹாஜி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் மாமனாரும், இமாம் புஹாரி மெட்ரிக் ஸ்கூல் நிருவனர் மெளலவி ஹாஜி M.Y. முஹம்மது அன்சாரி அவர்களின் தந்தையுமான ஹாஜி { மாமாங்கனி } முஹம்மது யூசுப் அவர்கள் இன்று {31 .12.2008} காலை 4. மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


தகவள்:

முபாரக் அலி .

அபுதாபி

எமது முதல் கிப்லாவின் வரலாறு காண இங்கே ஒரு அரை மணி நேரம் ஒதுக்குங்கள்

/>

Thanks By
Slji Media Centre

WWW.LALPET.COM

12.12.08

BDV-762854-BDV

10.12.08

சுவனத்தை நோக்கி ஒரு நாள் மாபொரும் இஸ்லாமிய மாநாடு & கண்காட்சி


மனிதநேய மக்கள் கட்சி சுவர் எழுத்துக்களின் மாதிரி வடிவங்கள்.

9.12.08

லால்பேட்டை முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் நிர்வாகிகள் தேர்வு

லால்பேட்டை டிச,7

லால்பேட்டை முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் செயர்க்குளு கூட்டம் 07.12.2008. ல்,நடைபெற்றது அதில் ஜாமா அத் நிர்வாகிகள் தேற்வு செய்யப்பனர்.

தலைவர்: ஹாஜி J.அப்துல் ஹமீது

கவுரவ தலைவர்: ஜனாப் O.P.இம்தாதுல் ஹுசேன்

துனை தலைவர்: ஹாஜி M.A.அப்துல் ரெஜாக்

செயலாளர்: ஹாஜி M.A.பத்ஹுத்தீன்

இணை செயலாளர்: ஹாஜி P.M.நஜீர் அஹமது

துணை செயலாளர்: ஹாஜி K.A.அமானுல்லா

பொருளாளர்:
ஜனாப் S.A. அஹது,
மெளலவி R.S.P. அபுல் பைசல்

ஆலோசகர்கள்:
ஹாஜி A.J. அகமதுல்லா B.E
ஹாஜி V.M. ஜியாவுத்தீன்
ஹாஜி A.R. சபியுல்லா

லால்பேட்டை ஹாலித் தந்தை அப்துல் ஹமிது வஃபாத்

லால்பேட்டை தெர்க்கு தெரு சிதம்பரத்தார் ஹாலித் அவர்களின் தந்தை அப்துல் ஹமிது அவர்கள் இன்று {09 .12.2008} மாலை 4.30 மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


தகவல்

சஹாரா டிராவல்ஸ்

6.12.08

ரியாத் நகரில் முஸ்லிம் கருத்தரங்கம்




5.12.08

கூத்தாநல்லூர் மக்களுக்கு மேலும் ஒரு் வலைப்பூ

கூத்தாநல்லூர் மக்களுக்கு ஊரிண் முக்கிய செய்திகளை இன்ஷா அல்லாஹ் அறிந்து கொள்ளும் வகையில் இந்த வலைப்பூ உருவாக்கப்பட்டுள்ளது மேலும் வேலை வாய்ப்பு பற்றிய செய்திகளும் இங்கு அறிவிக்கப்படும் இந்த வலைப்பூ மேலும் பிரபலம் அடைய அனைத்து மக்களுக்கும் பயன் பெரும் விதத்தில் மருத்துவ குறிப்புகளும் முதலீடு பற்றிய செய்திகளும் இஸ்லாமிய கேள்விபதில்களும், ஹதிஸ்களும் இணைக்கப்படும்.

இந்த வலைப்பூ பற்றிய கருத்துக்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் பதிக்கலாம் உங்கள் கருத்து கேட்டு இன்னும் நம்மை மேம்படுத்தி கொள்வதற்கு உதவும்.எங்கள் மின்னஞ்சல் முகவரி keoorganisation@gmail.com
வலைப்பூ முகவரி http://keoonline.blogspot.com/

வெள்ளத்தில் தத்தளித்த கடலூர் மாவட்டம்! உதவி கரம் நீட்டியது தமுமுக!!

கடலூர் மாவட்டம் முழுமையாக வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. சிதம்பரம், லால்பேட்டை, காட்டுமன்னார்குடி, கடலூர் ஓ.டி. ஆகிய பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளது. சிதம்பரம் நகரத்தில் பள்ளிப்படை, மணலூர், எம்.ஆர்.யு.நகர், நந்தவனம், ஓமக்குளம், கலைவாணர் நகர், உசுப்பூர், எம்.கே.தோட்டம், பூலாம்பேடு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நெய் புலவு சாப்பாடு, சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், ரவா உப்புமா, பால் பாக்கெட், பிஸ்கட் பாக்கெட், குடிநீர் மற்றும் மருந்துப் பொருட்கள் என சுமார் 4000 நபர்களுக்கு நவம்பர் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி விநியோகம், மருத்துவ முகாமுக்கான ஏற்பாடுகளில் மாவட்ட தமுமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் துறைமுகம் ஓ.டி. பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளை மாவட்டச் செயலாளர் சேக் தாவூது, நகர பொருளாளர் அஷ்ரப் ஆகியோர் தலைமை யில் தமுமுகவினர் செய்து வருகின்றனர்.

லால்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர் மழை யின் காரணமாக வீடுகளையும் உடைமை களையும் இழந்து வெள்ளத்தில் தத்த ளித்த மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து உணவு, மருத்துவம், அத்தியாவசியத் தேவைகள் செய்து கொடுக்கப்பட்டது.

நிவாரணப் பணியில் தமுமுகவினர் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ் வழியே வந்த உள்ளாட்சித் துறை அமைச் சர் மு.க.ஸ்டாலின் தனது வாகனத்தை நிறுத்தச் சொல்லி தமுமுக நிவாரண முகாமைப் பார்வையிட்டு, தமுமுகவினர் தயாரித்த உணவை ருசி பார்த்து “உணவு நன்றாக உள்ளது. சிறப்பாக செயல் படுங்கள்’’ என்று உற்சாகமூட்டிச் சென் றார்.

அவரிடம் தமுமுகவினர் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவில், “லால் பேட்டை மற்றும் கொல்லிமன கீழ்பாதி, கொல்லிமன மேல்பாதி, வ.குளக்குடி, ஜாகிர் உசேன் நகர், ரஹ்மத் நகர் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் வீடு, உடமைகளை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு உடனே நிவாரணம் வழங்குமாறு லால்பேட்டை தமுமுக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது’’
மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் மு.க.ஸ்டாலின், நிவாரணம் துரிதப் படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

எள்ளேரியில் சுமார் 1500 நபர்களுக் கும், ஆயங்குடியில் சுமார் 1000 நபர்களுக்கும் உணவு, பால், மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. தமுமுக மாவட்டத் தலைவர் ஜின்னா தலைமையில் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
Thanks TMMK

டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் லால்பேட்டை....!

லால்பேட்டை,டிச-5
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தின‌மான டிசம்பர் 6ஆ‌ம் தேதி லால்பேட்டையில் அனைத்து வர்த்தக நிருவனங்களும் மூடப்பட்டு இருக்கும் என லால்பேட்டை வர்த்தகசங்கம் அறிவித்துள்ளது.

1992 டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்று முதல் இன்று வரை டிசம்மர் 6 ஆம் தேதி லால்பேட்டையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும் அதுபோல் இந்த வருடமும் டிசம்பர் 6 ஆம் தேதி அனைத்து வர்த்தக நிருவனங்களும் மூடப்பட்டு இருக்கும் என்று வர்தகசங்கம் அறிவித்துள்ளது.

த.மு.மு.

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் த.மு.மு.க. மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி தலைமயில் நடைபெரும் ரயில்மறியல் போராட்டத்தில் லால்பேட்டையில் உள்ள த.மு.மு.க. தொண்டர்கள் பொரும்பாலானவர்கள் கலந்துக்கொள்வார்கள் என தமுமுக லால்பேட்டை கிளை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

மாவட்ட தலைநகர் கடலூரில் நடைப்பெரும் ஆர்ப்பட்டத்தில் லால்பேட்டையில் உள்ள த.த.ஜ. தொண்டர்கள் அனைவரும் கலந்துக்கொள்வார்கள் என்ரு லால்பேட்டை த.த.ஜ. கிளை அறிவித்துள்ளது.

2.12.08

டிசம்பர் - 6: பாபர் மஸ்ஜித் ஷஹீதாக்கப்பபட்ட நாள்! முஸ்லிம் லீக்

பாபர் மஸ்ஜித் விவகாரத்தை நீதி மன்றத்தின் முடிவுக்கு விட்டு அந்த தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்வதன் மூலமே தீர்க்க முடியும் என்பதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்து கின்ற வகையில் டிசம்பர்-6 அன்று சமய நல்லிணக்க கூட்டங்கள் நடத்தவும், பள்ளிவாசல்களில் துஆ மஜ்லிஸ் ஏற்பாடு செய்யவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புகளை கேட்டுக்கொள்கிறோம்.

28.11.08

சங்பரிவார்க் கும்பலும் வெடிகுண்டுக் கலாசாரமும். கி.வீரமணி உரை {வீடியோ}

சங்பரிவார்க் கும்பலும் வெடிகுண்டுக் கலாசாரமும் என்ற தலப்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை {20.11.2008}

டிச,6- அநீதிக்கு எதிராக ஆர்த்தெழுவோம்! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பு...


டிச,6- ரயில் மறியல் போராட்டம், த.மு.மு.க, அழைப்பு...

டிசம்பர் 6-அர்த்தமற்ற ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டம் வேண்டாம்

டிசம்பர் 6- இஸ்லாமியர்கள் இதயத்தில் ஈட்டி பாய்ந்த நாள்
அர்த்தமற்ற ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டம் வேண்டாம். அரசியல்
வலிமைபெற உறுதிமொழி எடுப்போம் வாரீர்!
துடிக்கும் இதயங்கள் எல்லாம் வெடிக்கும் எரிமலையாய் துக்கம் அனுஷ்டிக்கும் துயரச் சம்பவம் அரங்கேற்றப்பட்ட நாள் டிசம்பர் 6. இஸ்லாமியர்களின் இதயத்தில் ஈட்டி பாய்ந்த நாள். நாஜிசத்தையும், பாஸிசத்தையும் விஞ்சிய காவி இசத்தின் காட்டு தர்பாரில் 400 ஆண்டு கால பாபர் பள்ளி இடிக்கப்பட்ட நாள். இந்திய ஒருமைப்பாடும் சமூக நல்லிணக்கமும் மனிதநேயமும் மாய்க்கப்பட்ட நாள். ஆம் நரபலி ரத்தக்காட்டேறிகள் நாடாண்டதால் பாரத பண்பாட்டின் மானம் உலக அரங்கில் பாழ்படுத்தப்பட்ட நாள். இந்திய அரசியல் சட்டம் எங்கள் கால்களுக்கு கீழே என்று சொல்லி ராணுவம், காவல்துறை வேடிக்கை பார்க்க பட்டப்பகலில் பாபர் பள்ளி உடைக்கப்பட்ட கருப்பு நாள் டிசம்பர் 6.
சுதந்திரத்தின் பெருமை அடிமைகளுக்கு தெரிவதில்லை. ஆகையால் தான் அவர்கள் அடிமைகளாக இருக்கின்றனர் என்றான் கலில் ஜிப்ரான். ஜனநாயகத்தில் அரசியல் வலிமை தெரியாத காரணத்தினால் நீங்கள் அரசியல் அடிமைகளாக வாழ்க, ஒழிக என கோஷமிட்டு மாறி மாறி ஓட்டளித்து உருமாறி நீற்கிறீர்கள். 3ல் 2பங்கு பாராளுமன்றத்தில் எப்பொழுது நுழைகிறமோ அப்பொழுது பாபர் பள்ளி இடத்தில் கோயில் கட்டுவேபம் என்கிறார்கள். பி.ஜே.பி சங்பரிவாரக்கூட்டம்.

நீயோ அரசியலை புறக்கணித்து விட்டு பாபர் பள்ளியை மீட்க ரயிலை மறிப்போம், வான் ஊர்தியை மறிப்போம் என வெற்று கோஷ\மிட்டு கூடிக், கூடிக் களைகிறாய். சோடாபாட்டிலை திறந்தவுடன் குப் என்று அடிக்கும் சப்தத்தைப் போன்று டிசம்பர் 6 வந்தால் அர்த்தமற்ற ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டம் என்று சடங்கைப்போன்று கோஷமிட்டு ஆடி அமர்ந்து விடுகிறாய்.

இதயம் வெடிக்கிறது. சமுதாய இளைஞனே இது அல்ல தீர்வு. இங்கும், அங்கும் மாறி மாறி எத்தனை நாள் இரவல் அரசியலில் சமூகத்தை அடகு வைக்கப்போகிறாய். மார்க்கத்தையும், அரசியலையும் குழப்பி விரக்தியின் விளிம்பிற்கு இளைஞனை அழைத்துச்சென்றது போதும். கொடுக்காத இடஒதுக்கீட்டிற்கு நன்றி பாராட்டி கூனிக்குறுகி நின்றது போதும். இளைஞனே சிந்தி.

எத்தனை கலவரங்கள், எத்தனை உயிர் உடமை இழப்புக்கள், எத்துனை மனித உரிமை இயக்க குற்றச்சாட்டுகளின் சான்றுகள், எத்தனை விசாரணைக் கமிஷன்களின் ரிப்போர்ட்டுகள், இளைஞனே அரசியலை புறக்கணித்து விட்டு நீதி கேட்கிறாயே? நீதி கிடைத்ததாக வரலாறு உண்டா? குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாக வரலாறு உண்டா? இந்திய தேசத்தில் நிமிர்ந்து நிற்கவேண்டிய நீதிமன்றம் குனிந்து நிற்கிறது. குனிந்து நிற்கவேண்டிய குற்றவாளி நிமிர்ந்து நிற்கிறான். ஆம் பாபர் பள்ளியை இடித்த குற்றவாளிகள் அரசியலில் அதிகாரம் பெற்றதால் சிவப்பு நிற கம்பளத்தில் உலா வருகிறார்கள். நாங்கள் தாம் இடித்தோம் பள்ளியை என்று மார்தட்டுகிறார்கள்.

இன்றோ பள்ளி இடிப்பதற்கு துனை நின்ற காங்கிரஸிற்கு மத்தியில் ஆதரவு, பி.ஜே.பி யோடு கைகோர்த்து ஐந்து ஆண்டு பதவி சுகம் அனுபவித்த தி.மு.க விற்கு தமிழகத்தில் ஆதரவு உன் கோமாளி தனங்களை கணக்கிட்டால் இன்னொரு இமயமலையை உருவாக்கிவிடலாம். குதிரை போனபிறகு லாடத்தை தேடும். முட்டாள்களைப்போல் தேர்தல் முடிந்து விட்ட பிறகு நாங்களும் அரசியலுக்கு வருகிறோம் என்று குழப்பத்தை அறங்கேற்ற வருகிறாய். ரயிலில் ஏறுவதால் ரயில் நமக்கு சொந்தமாகி விடுவது இல்லை. ரயிலை மறிப்பதால் பாபர் பள்ளி மீண்டு விடுவது இல்லை. திட்டமிட்டு காலத்திற்கேற்ற செயலை செய்ய தவறுகிற சமுதாயம் அழிவை நோக்கி செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

பாபர் பள்ளி குஜராத், கோயம்புத்தூர்,முத்துப்பேட்டை என அநீதி தொடர்கிறது. வல்லவன் வைத்ததே வாய்க்கால் என்ற கூற்றுக்கு ஏற்ப அரசியலில் சிலர் ஆதிக்கம் பெற்றதால் உன்னை அசைக்கிறார்கள். காரணம் நீ அரசியல் அதிகாரம் பெறாததுதான். போதும் இளைஞனே பூக்கடையில் போர்வாள் கேட்கும் இழிநிலையை இதோடு நிறுத்திக்கொள். குறத்தி கூட்டத்தை கூட்டி வித்தை காட்டி களையும் செயலை நிறுத்திக்கொள். நம் உணர்வுகளுக்கு எண்ணக் குமுறல்களுக்கு இதயப் பொறுமல்களுக்கு வடிவம் கொடுத்திட, சட்ட மன்றம், பாராளுமன்றத்தில் சொந்த சின்னத்தில் நின்று நிமிர்ந்திட துயரத்தில் இருந்து ஞானம் பெற்றிட டிசம்பர் 6ல் IDMKல் உறுதிமொழி ஏற்ப்போம். உடன்பிறப்பே, கழிக்க முடியாத கடன் பிறப்பாய் வீழ்ந்த சமுகத்தை அரசியலில் தூக்கி நிறுத்திட சமுகத்தில் அரசியல் குழப்பம் விளைவிக்கும் குள்ளநரிகளை கூண்டோடு விரட்டிட, தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்து செயலாற்றிட, காட்டாற்று வெள்ளமாய் கடமையாற்றிட புறப்படுவீர் IDMK யை நோக்கி. பிறக்கட்டும் உன் உழைப்பில் அரசியல் வெற்றி. துடிக்கட்டும் ஜால்ரா போடும் சமுதாய துரோகிகள். துலங்கட்டும் உன் வெற்றி. தொடர்பு கொள்வீர். உன் பங்களிப்பை சமுகத்திற்கு பறைசாற்ற. IDMKல்

இவண் :
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
தமிழ்நாடு தொடர்புக்கு : 9790318182, 9344510369

27.11.08

பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டக்கோரி, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அயோத்தி சென்று ஆர்ப்பாட்டம்...

பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டக்கோரி, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அயோத்தி சென்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

இதற்காக பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி, சென்னையில் இருந்து தனி சிறப்பு ரெயிலில் 1,000 பேர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் அயோத்தி செல்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள விடுதலைச் சிறுத்தை கட்சியினர் உள்பட, முஸ்லிம்களும் பலர் அயோத்தி செல்கின்றனர்.

26.11.08

லால்பேட்டை வடக்கு தெரு மெஹராஜ் பேகம் வஃபாத்

லால்பேட்டை வடக்கு தெரு சட்டி முஹம்மது ஆரிப் மனைவி (நத்தர் இஸ்மாயில் மகள்) மெஹராஜ் பேகம் அவர்கள் இன்று {25 .11.2008} தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


தகவல்:

சஹாரா டிராவலஸ்

லால்பேட்டை

24.11.08

தப்பித்தவறிக் கூட மவுசால் க்ளிக் பண்ணிடாதீங்க!


மவுஸில் க்ளிக் செய்வது என்பது கணினி யுகத்தில் தவிர்க்க இயலாத செயல். நாம் அடிக்கடி அதைக் கிளிக் செய்தே நமது காரியங்களை ஆற்றிக்கொண்டிருக்கிறோம்.

இணைய உலகத்தில் இருக்கும் கோடிக்கணக்கான இணையத்தளங்களில், நான் கண்ட ஒரு வித்தியாசமான தளத்தை உங்களுக்கு இங்கே அறிமுகப்படுத்துகிறேன்.

ஒரு இணையத்தளத்தில் இறுதி வரை மவுஸ் கிளிக்கைத் தவிர்த்து முழுக்க முழுக்க அனிமேசன்களாலும், புதிய அணுகுமுறையாலும் மனதைக் கொள்ளையடித்திருக்கிறார்கள்.

இத்தனைக்கும் தளத்தின் வேகமும் அதிரடியாக இருக்கிறது.

மீறி இந்தத்தளத்தில் மவுசால் கிளிக் செய்தால் என்ன நடக்கிறது என்பதை ஒருமுறை நீங்களே பாருங்கள். http://www.dontclick.it/
Thanks:tamizh2000.blogspot.com/2008/11/blog-post_2543.html
.

எந்த ஒரு வீடியோவையும் டிவிடிக்கு மாற்ற : DVD Flick


கணினியில் உள்ள வீடியோ கோப்புகளை டிவிடியில் இயக்கக்கூடிய வடிவத்திற்கு மாற்றுவதற்கு இந்தப் பயன்பாடு உதவுகிறது.

வழக்கமான டிவிடி ரைட்டர் பயன்பாடுகளில் இல்லாத புதிய அம்சங்கள் இந்தப் பயன்பாட்டில் உள்ளது.

45 விதமான கோப்புவடிவங்கள், 60 விதமான வீடியோ வடிவங்கள், 40 வித ஆடியோவடிவங்கள் போன்றவற்றை டிவிடிக்கு மாற்றுவதற்கு இதனால் இயலும்.

மெனு, சப்டைட்டில் போன்றவற்றையும் அனுமதிக்கிறது.

முழுவதும் இலவசமானது.இதன் மூலவரைவும் இலவசமானதே.

DVD Flick aims to be a simple but at the same time powerful DVD Authoring tool. It can take a number of video files stored on your computer and turn them into a DVD that will play back on your DVD player, Media Center or Home Cinema Set. You can add additional custom audio tracks, subtitles as well as a menu for easier navigation.


Thanks:tamizh2000.blogspot.co

வக்ஃபு இடத்தில் அறிவாலயமா? வெட்ககேடு!! வெட்ககேடு!! - IDMK Interview in JUVEE

திருச்சி ருஸ்த்தும் பீவீ பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை திமுக வினர் கலைஞர் அறிவாலயத்திற்காக ஆக்கிரமித்துள்ளதால் அதை மீட்டெடுக்கும் போராட்டத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சி ஈடுபட்டுள்ளதை அணைவரும் அறிவர்.இதன் ஒரு பகுதியாக தமிழகமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இது குறித்து ஜீனியர் விகடன் பத்திரிகையில் வெளியாகியுள்ள இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்களின் பேட்டி இங்கு வெளியிடப்படுகின்றது. புகைப்படங்களின் மேல் சொடுக்கி அதை பெரிதாக்கி படிக்கவோ பிரின்ட் எடுக்கவோ செய்யலாம்.

தமிழகத்தை கலக்கிய சுவரொட்டி


Thanks: IDMK

23.11.08

ஜிமெயில் பேக்-அப்


இணையத்தில் காணக்கிடைக்கும் பல இலவச மெயில் சேவைகளில் "ஜிமெயில்" இன்றைக்கு நம்மில் பலருக்கும் பிரதான மெயிலாசனமாகிவிட்டது. ஒரே பயனர் கணக்கில் மெயில் அக்கவுண்ட், ஐகூகிள், பிக்காசா, அட்சென்ஸ், ஆர்குட் என்று பலவசதிகள் வைத்துக் கொள்ளலாம் என்பது அதற்கான இன்னொரு காரணம்.அப்படியே மைக்ரோசாப்ட் வழங்கும் ஸ்கைடிரைவ்(5 GB) போல கூகிளும் சீக்கிரம் ஜிடிரைவ் வழங்கினால் நன்னா இருக்கும்.

உங்கள் ஜிமெயிலிலிருக்கும் மின்னஞ்சல்களையெல்லாம் இறக்கம் செய்து உங்கள் கணிணியின் ஹார்ட் டிரைவில் பாதுகாப்பாக சேமித்துவைத்துக்கொள்ள வேண்டுமா?பின்பு நேரம்கிடைக்கும் போதெல்லாம் இணைய இணைப்பில்லாத போதும் அம்மெயில்களை அட்டாச்மெண்ட்களோடு திறந்து படிக்கவேண்டுமா? பழையதொரு ஜிமெயில் அக்கவுண்டிலிருக்கும் உங்கள் மின்னஞ்சல்களையெல்லாம் புதியதொரு உங்கள் ஜிமெயில் அக்கவுண்டுக்கு மாற்றவேண்டுமா? இரு வேறு உங்கள் ஜிமெயில் அக்கவுண்டுகளை ஒன்றிணைக்க வேண்டுமா?

எளிய இலவச Gmail-Backup டூல் மேற்கண்ட சூழ்ச்சிகளையெல்லாம் உங்களுக்கு செய்கின்றது. ஒரே கண்டிசன். உங்கள் ஜிமெயிலில் IMAP-ஆனது enable செய்யப்பட்டிருக்க வேண்டும்.விண்டோசில் மட்டுமல்லாது லினக்சிலும் இந்த பயன்பாட்டை பயன்படுத்தலாம் என்பது கூடுதல் விசேசம்.

Download from here http://www.gmail-backup.com/

Thanks:pkp

சி.எஸ்.எஸ். மென்னூல் இலவசம்


சி.எஸ்.எஸ் என்பது cascading style sheet எனப்படும் ஒரு அழகியல் சார்ந்த, html படிவங்களை மெருகேற்றி, அழகேற்ற உதவும் கட்டமைப்பு.




இந்தப் புத்தகம் Oreilly நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.


40$ மதிப்புள்ள 23.1 எம்பி அளவுள்ள மென்னூல் இது.


எத்தனையோ விலை அதிகம் உள்ள நூல்கள், சட்டபூர்வமின்றி இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. இருந்தாலும்,sitepoint.com இந்த மென்னூலை இலவசமாக சட்டபூர்வமாக, நிர்வாகச் சிக்கல் இன்றி வழங்குகிறது.


இங்கே சொடுக்கி இணையிறக்கம் செய்யலாம். சலுகை குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே.




Thanks:T2000

வேலைவாய்ப்புத் தகவல்கள் - அறிமுகம்


தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியை வழங்குவோம். (அல் குர்ஆன் 4 : 114)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வேலை வாய்ப்பு தகவல்களை வழங்குவதற்காக இந்த வலைப்பூ உருவாக்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும் வேலை வாய்ப்பு தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் இந்த தளத்தை உரிமையுடன் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பிறருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே இந்த முயற்சியை எடுத்துள்ளோம். எனவே நல்லெண்ணம் கொண்ட அனைவரும் இது சம்பந்தமாக உங்களால் முடிந்த அளவு எங்களோடு ஒத்துழைத்து பிறருக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

எந்த பகுதியில் வேலை வாய்ப்புகள் இருப்பினும் உரிய தொடர்பு மற்றும் விபரங்களை அளிப்பதாயின் உடனுக்குடன் அந்த தகவலை இதில் பதிவு செய்வோம்.

குறிப்பிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டால் அந்தந்த பதிவில் அதன் விபரங்களை வெளியிட்டு தெளிவுபடுத்துவோம் - இன்ஷா அல்லாஹ்.

19.11.08

பழ. நெடுமாறன் தலைமையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் பரமக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்

இடமிருந்து திரு. குத்புதீன் ஐபக், ஐயா பழ. நெடுமாறன், திரு. முகவைத்தமிழன்

தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையை கண்டித்து இன்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 18.11.2008 அன்று மாலை 3 மணியளவில் நடத்தப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திரு. சி. பசுமலை, தமிழர் தேசிய இயக்கம் தலைமை வகித்தார்கள். இந்திய தேசிய லீக்கை சேர்ந்த திரு. சாகுல் ஹமீது , தமிழ்நாடு உடல் ஊணமுற்றோர் பேரவையை சேர்ந்த திரு. அப்துல் நஜிமுதீன், திரு. ம. காமராஜர், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் திரு. பீட்டர் வளவன், கவிஞர். திரு. முகவை அரசுமனி, நகர் மலர் செய்தியாளர் திரு. என். சொர்னவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய தேசிய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள்,இந்திய தேசிய லீக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் , அமைப்புகள் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் திரு. முகவைத்தமிழன், தமிழர் தேசிய இயக்க பொதுச் செயளாலர் திரு. கா. பரந்தாமன், தியாகி இமானுவேல் பேரவை பொது செயளாலர் திரு. சந்திரபோஸ், விடுதலை சிறுத்தைகள் மு. குணவேந்தன், செ.அ.தொ.நல சங்கம் ம. நாகராஜன், ம.ச.இ.க செயளாலர் குணசேகரன், வே. முருகேசன், தமிழ் பாதுகாப்பு பேரவை தலைவர் திரு. நாகேஸ்வரன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயளாலர் திரு. தங்கராசு, மனித உரிகைமள் கழகம் செந்தில் விஸ்வனாத், வைகை பாசன விவசாய சங்கம் மாநில செயளாலர் திரு. மு. மதுரை வீரன், விடுதலை சிறுத்தைகள் சிவகங்கை மாவட்ட செயளாலர் திரு. ஆல்பர்ட் (எ) நந்தன், ஆதி தமிழர் பேரவை சுகுமாறன், சி.பி.ஐ ஒன்றிய செயளாலர் சுப்பிரமனியன், சமத்துவ மக்கள் கட்சி வேலுச்சாமி, கோ. இராமசாமி, தோலூர் பஞ்சாசரம், இந்திய தேசிய மக்கள் கட்சியின் திரு. ஜஹாங்கீர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.


ஐயா. பழ. நெடுமாறன் பேசுகிறார் அருகில் தமிழ் பாதுகாப்பு இயக்கம் திரு. நாகேஸ்வரன், அமாந்திருப்பது குத்புதீன் ஐபக், டாக்டர் பக்ருதீன், திரு. முகவைத்தமிழன், திரு. ஜஹாங்கீர்

பின்னர் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் ஐயா. திரு. பழ. நெடுமாறன் அவர்கள் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்து பேருரை நிகழ்த்தினார்கள். நிகழச்சியின் இறுதியில் செ.அ.தெ.ந.மு.ச. தலைவர் திரு. பா. ஞானமுத்து அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள். பின்னர் இராமேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஐயா பழ. நெடுமாறன் அவர்களோடு அனைவரும் புறப்பட்டு சென்றனர்.

தமிழ் சிந்தனையாளர் திரு. சை. செளந்தரபாண்டியன், தமிழிய சட்ட நிறுவனம் திரு. ப.பா. தியாகராஜன் ஆகியோர் ஒருங்கினைத்திருந்தனர்.
Thnks: IDMK

16.11.08

The useful information for Haji’s

The useful information for Haji’s

Telephone Numbers at Makah


Indian Haj Office,
IN FRONT OF AJYAD MAKKAH HOTEL, AJYAD
MAKKAH AL-MUKARRAMA (P.O. BOX NO. 5781].
Phone: 009662 5759034, 5758231, 5758209, 5758208.

IMAM M. HUSAIN,
In-charge, Indian Haj Mission, Makkah. Phone:
009662-5758216

NADEEM SIDDIQUI,
Assistant Welfare Indian Haj Mission, Makkah. Phone:
009662-5758209.

MEDICAL OFFICER,
In-charge, Indian Medical Mission, Makkah. Phone:
009662-5758209, 5758214
Haram Shareef Police Station 02- 575 0200
Police Station near Haram Shareef (Ajyad) 02- 534 1165
Misfalah Police Station 02- 574 1283
Qararah Police Station 02- 574 6808
Haram Sharief Madinah Al-Munawwrah 009664-823 0930


INDIAN HAJ OFFICE, Madinah Al-Munawwrah,
Behid National Company, Near Al-Quds-Hotel,
Sitteen Street, Madinah-AI-Munawwarah
Phone: 009664 8380025, 8344715 Fax: 8387549

PILGRIM RECEPTION CENTRE, Hijra Road
Phone: 009664 8261941, Fax: 8264096.

CONSULATE GENERAL OF INDIA
Building of Bugshan & Brothers, Next to Al-Mira Carpets,
Sharafia Dist, Madinah Road, PO Box 952, Jeddah- 21421
Phone: 0096626520104, 6520112, 6517581
Fax: 009662-6533964

DR. AUSAF SAYEED, Consul General 009662-6520072
DR.SUHELAJAZKHAN, Consul (Haj) 009662-6520084 (Direct)

MR. D. K. SRIVASTAVA, Vice Consul (Haj) 009662-6510514
HAJ SECTION 009662-6533032

NEAR HARAM SHAREEF, MAKKAH (ISD Code -009662)
· Ajyad Hospital, Ajyad Phone: 5730070
· King Abdul Aziz Hospital, Zahir Phone: 5442400
· Noor Hospital, Azizia Junubia Phone: 5665000
· Hera General Hospital, Taneim Phone: 5201604.
· King Faisal Hospital, Shisha Phone: 5566411
· Ministry of Health, Mohalla Zahir Opp. Jawazat,
· Makkah Phone: 5457774.


MADINAH AL-MUNAWWARAH (ISD Code-009664)
· Director of Health, Dr. Abdul Qader Ahmed
· Al-Tayyeb, Matar Road. Phone: 8370600.
· King Fahad Hospital, Tabuk Phone: 8460145 (Fax) 8460900.
· Ohud Hospital, University Road Phone: 8460016

· Meeqat Hospital, Meeqat Road Phone: 8237892.
· Chest Hospital, Qurban Road Phone: 8266639.
· Children & Maternity Hospital,
· Sitteen Road.Phone: 8361000.
· Al-Ansar Hospital, Behind Masjid Ijaba, Sitteen Road. Phone: 8361848.

Thanks
Meerasan Ahamed

15.11.08

லால்பேட்டை மர்ஹூம் ஹபீபுற்றஹ்மான் மனைவி வஃபாத்

லால்பேட்டை கொத்தவால் தெரு மர்ஹும் கோசி ஹபீபுற்றஹ்மான் மனைவியும் {சட்டி} அப்துல் ஹமீது மாமியாருமான ஹதீஜா பீவி அவர்கள் இன்று 15.11.2008 காலை தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். தகவல்: சஹாரா டிராவல்ஸ் லால்பேட்டை

14.11.08

சவூதி அரேபியா நாட்டில் எழுத படிக்கத் தெரியாத வெளிநாட்டவர்கள் வேலை செய்ய தடை

சவூதி அரேபியா நாட்டில் எழுத படிக்கத் தெரியாத வெளிநாட்டவர்கள் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

படிப்பறிவில்லாத வெளிநாட்டவர்களுக்கு வேலை கொடுக்க கூடாது என்றும் அங்குள்ள நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைக்கு உள்துறை மந்திரியும், இளவரசருமான பிக்அப்துல்லா ஒப்புதல் அளித்துள்ளார்.

சவூதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிக்கிக் கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத வெளிநாட்டவர்கள் என்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

படிப்பறிவில்லாத அப்பாவி வெளிநாட்டு தொழிலாளர்களை சில கும்பல் குற்றச் செயல்களில் ஈடுபடுத்துவதை தடுக்கவே இந்த நடவடிக்கை.
.

12.11.08

இந்திய மாணவர்களுக்காக மைக்ரோசாப்ட்டின் இலவச மென்பொருட்கள்



100 மில்லியன் மாணவமணிகளுக்கு இந்த மென்பொருட்கள் இலவசமாகக் கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்வந்துள்ளது.திரு.

பில்கேட்ஸ் அவர்கள் இந்தியாவில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்காக ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி பட்ட மேற்படிப்போ, பட்டப்படிப்போ படித்துக்கொண்டிருக்கும் தொழில்நுட்பப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது அடையாள அட்டைகளை அருகில் உள்ள அப்டெக், என்.ஐ.ஐ.டி கணினிப் பயிற்சிப் பட்டறைகளில் காண்பித்தால் அவர்களுக்கு மைக்ரோசாப்ட்டின் இலவச டிவிடி வழங்கப்படும்.

அந்த டிவிடியில் விண்டோஸ் சர்வர் 2003, விசுவல் ஸ்டுடியோ 2008, எஸ்க்யூஎல் சர்வர் 2005, மைக்ரோசாப்ட் எக்ஸ்ப்ரசன் ஸ்டுடியோ, விர்ச்சுவல் பிசி ஆகிய மென்பொருள்கள் அடங்கியிருக்கும்.

* Visual Studio 2005/2008 Professional Edition


* Expression Studio, includingo Expression Web


o Expression Blend


o Expression Designo Expression Media


* SQL Server 2005 Express


* SQL Server 2005 Developer Edition
* Windows Standard Server, XNA Game Studio 2.0 (with 12-month trial academic subscription to the XNA Creators Club)

மாணவர்களின் இணைய இணைப்பின் பேண்ட்வித் நன்றாக இருந்தால் அவர்கள்
http://www.dreamsparkindia.com/dreamspark/GetDreamTools.aspx?Tab=1 தளத்திலிருந்து நேரடியாகவே இந்த மென்பொருள்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

2009ம் ஆண்டின் ஆரம்ப மாதங்களின் இந்தச்சலுகை 11, 12ம் வகுப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்படவிருக்கிறது என்பது இனிப்பான செய்தி.இதனால் இந்தியாவின் மனிதவளத்தை பில்கேட்ஸ் அபகரிக்கப்போகிறார் என்கிற குற்றச்சாட்டுகள் எழலாம். ஆனால் ஒன்றும் இல்லாமல் ஏதோ படித்தோம் / ஏதோ ஒரு வேலையைச் செய்தோம் / இறந்தோம் - என இல்லாமல் வாழ்வில் ஒரு திருப்புமுனைக்காக ஏங்கும் எத்தனையோ மாணவச் செல்வங்களுக்கு இந்தப் பயன்பாடுகள் கண்டிப்பாக உதவும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. இது குறித்து மாற்றுக்கருத்துக் கூற விரும்புபவர்கள் பின்னூட்டம் இடலாம்.



Thanks: Tamil2000

புதிய Video Chat ஜிமெயில் வழியாக


Yahoo வாயிலாகவே இதுவரையில் Video Chat செய்து வந்திருந்தோம்.Google Chatல் அந்த வசதியில்லாமலேயே இருந்தது.

இன்று Google வெளியிட்டு இருக்கும் புதிய தகவல் தெரிவிக்கும் செய்தி என்னவென்றால் இன்றிலிருந்து Gmail மூலமாகவும் Video அரட்டைகள் அடிக்க இயலும் என்பதே.

உங்கள் கணினியுடன் ஒரு Web Cameraவை இணைத்து இருக்கவேண்டும்.
http://mail.google.com/videochat லிருந்து மென்பொருளைத் தரவிறக்கம் செய்து நிறுவவேண்டும்.

பிறகு உங்கள் Gmail பக்கத்தைத் திறந்து Login ஆகவும். இடதுபுறம் உள்ள Chat பகுதியில் உங்கள் நண்பருடன் Chat செய்ய ஆரம்பிக்கவும்.
நண்பர் பெயரைத் தலைப்பாகக் கொண்டு ஒரு புதிய Popup தெரிய ஆரம்பிக்கும்.

அதில் நண்பர் பெயரைச் சொல்லி அவருக்கு Video அரட்டை அடிப்பதற்கு அழைப்பிதல் (Invitation) கொடுக்க வேண்டும்.

அவரிடம் இருந்து அழைப்பிதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் Start Video Chat எனக் கொடுத்தால் போதும்.

11.11.08

காய்கள், பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா?

ம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும். இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா? நிச்சயம் முடியும். இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம்.

காரட்: தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
.
முட்டைக்கோசு: மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கிறது.
பீட்ரூட்: ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.

இஞ்சி: கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது.
.
வெங்காயம்: வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இரத்தத்தின் உறை தன்மையும், ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய் வரவே வராது. மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது. இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள்: இதில் உள்ள `பெக்டின்' என்ற நார்ச்சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து 15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.
அன்னாசி: இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் அன்னாசி சிறந்து விளங்குகிறது. மேலும், அன்னாசிப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உறையும் தன்மை குறைவதோடு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.

எலுமிச்சம்பழம்: உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் உறுதிப்படுத்துவதோடு சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எலுமிச்சையில் `பெக்டின்' சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.

பூண்டு: இதில் `சாலிசிலிக்' என்ற இரசாயனப் பொருள் உள்ளது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள `சாலிசிலிக்' என்ற சத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது. தாமரைப்பூவிலும் இச்சத்து உண்டு.
சுரைக்காய்: இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை நீக்குவதில் சுரைக்காய் பலே கில்லாடி! சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.

வெள்ளரிக்காய்: இயற்கை அன்னை நமக்கு நல்கிய அற்புதமான காய். இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாக குறைத்து, இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு.

தர்ப்பூசணி: இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.

முள்ளங்கி, வெண்டைக்காய்: இந்தக் காய்களைத் தினசரி காலையில் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்களில் 80 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.

எனவே, காய்களையும் பழங்களையும் நிறையச் சாப்பிட்டு இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகளைப் போக்கி மாரடைப்பு நம்மைத் தாக்காத வண்ணம் இன்புற்று வாழலாம்.

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மவுலானா அபுல் கலாம் ஆசாத்திற்கு மரியாதை

புதுடில்லி : இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான
மவுலானா அபுல் கலாம் ஆசாத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரது பிறந்த நாளான நேற்று முதல் தேசிய கல்வி தினம் கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், பாகிஸ்தான் பிரிவினையை ஆதரிக்காத தலைவருமான மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளையொட்டி, முதல் தேசிய கல்வி தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள், பட்டிமன்றம், கருத்தரங்கம் போன்றவை நடைபெற்றன.

மேலும், மவுலானா அபுல் கலாம் ஆசாத்தை கவுரவப்படுத்தும் விதமாக, ஜனாதிபதி அஞ்சல் உறை ஒன்றை வெளியிட்டார்.

இவ்விழாவை துவக்கி வைத்து பேசிய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேசுகையில், " நமது கல்வி நிறுவனங்களை பலப்படுத்துவது மற்றும் கல்வியின் தரத்தை உயர்த்துவதே, தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கம். நம் கல்வி பயிற்று முறையில் இன்னும் முன்னேற்றம் தேவை' என்றார்.

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இலவச தையல் மெஷின்

திட்டக்குடி:திட்டக்குடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இலவச தையல் மெஷின் கள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு நகர தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார்.

ஷாகுல்அமீது, அப்துல்சலாம், உசேன், கருப்புசாமி, தங்கம்வேல்முருகன் முன்னிலை வகித்தனர். செயலாளர் அப்துல்லா வரவேற்றார்.

"ஏழைக்கு உதவுங்கள்' தலைப்பில் இமாம் முஹம்மத் தய்யூப் விளக்கி பேசினார். தொடர்ந்து இரண்டு ஏழை குடும்பங்களுக்கு தையல் மெஷின்களை சம்சுதீன் வழங்கினார்.

ராஜாமுகம்மது, சாதிக், இப்ராஹிம், தங்கதுரை, தீன், தாவூது உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்.

பள்ளிக்கூடத்தில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத பயிற்சி!

பள்ளிக்கூடத்தில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத பயிற்சி!
பொதுமக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்
'
காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை கிராமத்தில் உள்ளது பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடம். இந்தப் பள்ளியில் சுமார் 3500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

கடந்த நவம்பர் 8ம் தேதி இப்பள்ளிக்கு விடுமுறை நாள். ஆனால் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் களுக்கு சிறப்பு வகுப்பு என்ற பெயரில் அழைக்கப்பட்டனர்.
பொதுமக்கள் மீது ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கொலைவெறித் தாக்குதல்

சிறப்பு வகுப்பு நடத்துவதில் ஆர்வம் காட்டுவது போல தன்னை காட்டிக் கொண்ட பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் அன்றைய தினம் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கருத்தரங் கம் மற்றும் பயிற்சி முகாம் நடத்த அனுமதித்திருந்தனர்.

இந்த முகாமில் பங்கேற்க பல்வேறு ஊர்களில் இருந்தும் சுமார் 400க்கும் மேற் பட்ட ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வந்திருந்தனர்.

பள்ளிக்கூடத்தில் ஆர்.எஸ்.எஸ். கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாமை நடத்த அப்பகுதியைச் சேர்ந்த தமுமுக, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தை கள் கட்சி பிரமுகர்கள் எதிர்ப்பு தெரி வித்தனர்.

காலை 10 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடந்து கொண்டிருந்த பள்ளி முன்பு எதிர்ப்பாளர்கள் திரண்டனர். பள்ளி நிர்வாகி அருண்குமாரிடம் சென்று மத துவேஷத்தை வளர்க்கும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடத்த அனுமதித்தது தவறு. நீங்கள் எப்படி அவர்கள் பயிற்சி முகாமுக்கு அனுமதிக்கலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். முகாமில் பங்கெடுக்க வந்தவர்களில் ஒரு பிரிவினர், தமுமுக, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை பயங்கர ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கினார்கள்.

இதில் தமுமுகவைச் சார்ந்த பாஷா, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக் குமார், கமலநாதன், விடுதலைச் சிறுத்தை கள் கட்சியைச் சேர்ந்த டேவிட், நாராயணன், வெங்கடேசன் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கண்மூடித்தனமான தாக்குதலில் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர். இதில் பாஷா பாய் சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் நால்வர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை யில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டனர்.

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டு, தாக்குதலைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

பள்ளியிலிருந்து வெளியேறும் மாணவர்கள்

இதனால் கோபம் அடைந்த ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளிக்கூடத்தில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் வெளியே வந்து கோஷங்களை எழுப்பியவர்கள் மீது கடுமையானத் தாக்குதலை நடத்தினார் கள். இதனால் பொதுமக்கள் அங்குமிங் கும் சிதறி ஓடினார்கள். இதன்காரண மாக அப்பகுதி கலவர பூமியானது.

கலவரத்தைப் பார்த்த பள்ளியில் இருந்த மாணவர் மாணவிகள் அதிர்ச்சி யடைந்தனர். பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கும் பொதுமக்களும் மத்தி யில் பெரும் மோதல் ஏற்பட்டது. அப் பகுதியே கலவரச் சூழலில் உள்ளது என அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர் களும் பள்ளிக்கூடம் முன்பு திரள ஆரம்பித்தனர்.

தாக்குதல் சம்பவத்தை அறிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். இதையடுத்து போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் பெற்றோரும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பயிற்சி முகாமிற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்ததைக் கண்டித்தனர். காவல்துறை அதிகாரிக ளிடம் தமுமுகவினர், கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள், மாணவர்களின் பெற்றோர் என அனை வரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை பள்ளி யில் இருந்து உடனே வெளியேற்ற வேண்டும், இல்லையென்றால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு பள்ளி நிர்வாக மும் காவல்துறையும்தான் பொறுப்பேற்க வேண்டிவரும் என எச்சரித்தனர்.

இதையடுத்து காவல்துறை அதிகாரி கள் சமுத்திரக்கனி மற்றும் முனியப்பன், வருவாய் கோட்டாட்சியர் முருகைய்யா, தாசில்தார் நடராஜன், ஆய்வாளர் பாலு ஆகியோர் பள்ளி நிர்வாகிகளிடம், ஆர்.எஸ்.எஸ்.காரர்களை உடனே வெளி யேற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமுக்காக இடமளித்த பள்ளி நிர்வாகிகள் மீதும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த கமல நாதன் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தார். இதனை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மாவட் டச் செயலாளர் விடுதலை செழியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் வழக்கறிஞர் பார்வேந்தன் உட்பட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கலந்து கொண்டனர்.

காஞ்சி மாவட்ட துணைச் செயலாளர் மீராசா தலைமையில் தமுமுகவினர் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியபடி பள்ளியை முற்றுகையிட்ட னர். நகரச் செயலாளர் தாஜுதீன், கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துக்குமார் உட்பட பலரும் இதில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வுகளால் அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு பதற்றம் நிலவியது.

இதனிடையே பள்ளி நிர்வாகி அருண் குமார் உட்பட மூன்று பேர் கைது செய்யப் பட்டனர்.

பெரும் வன்முறையில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ்.காரர்களில் 4 பேரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.

நாட்டில் அமைதியைக் குலைக்கும் சங் பரிவார் அமைப்புகளை ஊக்குவிக்கும் பள்ளிகளை காவல்துறை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும், சம்பந்தப் பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.

பெற்றோர்களே உஷார்...
இளம் பருவத்திலேயே மாணவர்களுக்கு மதச்சார்பற்ற கொள்கையையும் மனிதநேய சிந்தனையையும் வளர்க்க வேண்டிய பள்ளி நிர்வாகங்கள் மதத் துவேஷ கருத்துக்களையும், வன்முறையையும் வளர்த்து இந்த தேசத்தின் விடுதலைக்குப் போராடிய தேசத் தலைவர் மகாத்மா காந்தியை சுட்டுப் படுகொலை செய்த கோட்சே கூட்டம் இந்த நாட்டில் தனது செயல் பாடுகளால் மக்கள் விரோத, தேச நலனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு மூன்று முறை தடை செய்யப் பட்ட இயக்கமான ஆர்.எஸ்.எஸ். ஸுக்கு ஆதரவாகவும், மாணவர்கள் மத்தியில் இவ்வியக்கத்தை அறிமுகப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர். பெற்றோர்கள் மேற்படி நடவடிக்கைகளில் ஈடுபடும் பள்ளியைக் கண்காணித்து கல்வித் துறைக் கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் புகார்களை அனுப்ப வேண்டும்.
Thanks TMMK website

10.11.08

முஸ்லீம் ஜமாத் துவக்கம்...





தகவல்:
A.H. நஜீர் அஹ்மத்
அபுதாபி

9.11.08

உற்சாகம் தரும் நட்பு


`உன் நண்பன் யார் என்று சொல், உன்னைப்பற்றி சொல்கிறேன்' என்ற பழமொழி பற்றி அறிந்து இருக்கலாம்.
அந்த அளவுக்கு நண்பனின் முக்கியத்துவம் இருப்பதை அறியலாம். உங்களைச்சுற்றி நல்ல நண்பர்கள் இருந்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. டாக்டர் ரிச்சர்டு டன்னி தலைமையில் இதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது உங்களுக்கு மிகவும் நல்ல பழக்கவழக்கங்கள் உள்ள 10 நண்பர்கள் இருந்தால் போதும், நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், நல்ல செயல்களுடன் இருப்பீர்கள் என்று தெரியவந்தது.
பல்வேறு வயதுள்ள 1760 பேர்களை தேர்ந்து எடுத்து அவர்களிடம் இதுகுறித்த கேள்விகள் கேட்கப்பட்டது.
அப்போது நல்ல நண்பர்கள் உள்ளவர்கள் திருப்தியான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வது தெரிந்தது.

8.11.08

சிறுபான்மை இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி!

சிறுபான்மை இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி!
அக் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்!!
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், படித்து
வேலையில்லாத சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி நிலையங்கள் மூலமாக தொழிற்பயிற்சி வழங்க உள்ளது.

இப்பயிற்சியில் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் அண்ட் நெட் ஒர்க்கிங், சி.சி. பிளஸ், பிளஸ், டி.டி.பி. டேலி வித் எம்.எஸ். ஆபீஸ் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படும்.

10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞர்கள் தங்கள் குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் இப்பயிற்சியில் சேர தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

எனவே, விருப்பம் உள்ள சிறுபான்மையின இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் விண்ணப்பத்தை வெள்ளைத்தாளில் எழுதி அதனுடன் சாதிச் சான்றிதழ் நகல், 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் அல்லது கூடுதல் கல்வித் தகுதி இருந்தால் அதற்குரிய சான்றிதழ்கள், வருமான சான்றிதழ் நகல், பள்ளி அல்லது கல்லூரி மாற்று சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைத்து தபாலில்

மேலாண்மை இயக்குநர்,
தமிழ்நாடு சிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,
5வது தளம்,
807, அண்ணாசாலை,
சென்னை.

என்ற முகவரிக்கு வருகிற 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தபால் உறையின் மேல் பகுதியில் பயிற்சியின் பெயர், பயிற்சி பெற விரும்பும் ஏதேனும் ஒரு பாடத்தினை மட்டும் குறிப்பிட வேண்டும். இந்த வாய்ப்பை முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் சுக்கூர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Thanks: IUML website

7.11.08

லால்பேட்டை வடக்கு தெரு ஹாஜி முஹம்மது பாருக் தாயார் வஃபாத்

லால்பேட்டை வடக்கு தெரு ஹாஜி முஹம்மது பாருக், முஹம்மது அன்சாரி. ஜாபர் அலி, முஹிபுல்லாஹ், ஆகியோரின் தாயார் ஹாஜியா ஜுபைதா பீவி அவர்கள் இன்று {07 .11.2008} நல்ளிரவு 11.30 மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஒரு இணையத்தளத்தையே உள்ளங்கையில் எடுத்துச் செல்வது எப்படி?

ஒரு வெப்சைட்டில் உள்ள அனைத்து இணையப்பக்கங்கள் அவற்றின் உள்ளே உள்ள இன்டெர்னல் லிங்குகள் படங்கள், ஆடியோ,வீடியோ அனைத்தையும் அப்படியே ஒரே சொடுக்கில் தரவிறக்கம் செய்யலாம்.அதை இணைய இணைப்பின்றி உலாவலாம்.

இந்த மென்பொருளைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த இணையத்தளத்தை அப்படியே இறக்கி, யு.எஸ்.பியில் பதிந்து உள்ளங்கையில் எடுத்துச்செல்லலாம். சாத்தியமே.

எல்லாத்துக்குமே மென்பொருட்களா?

What is WebZIP?
Using WebZIP you can:

Download and save an entire Web site.
Download and save particular sections of a Web site you require.View saved web content offline.

Easily compile downloaded content into compressed HTML-Help (.chm) files which automatically incorporate a Table of Contents and Full Text Search capabilities.Compress saved web content into a single zip file.Conveniently move a saved website to another computer.
Email a saved Web to a colleague.

Create your own "Personal Intranet" where web information is quickly and readily available from your local hard disk.

WebZIP can save you a lot of time and money, since viewing a website offline is much faster than clicking from link to link whilst online. In addition, WebZIP can download up to 16 pages or images simultaneously, thus large amounts of information can be retrieved in very little time.

Browse offline anywhere, anytime at breakneck speeds
Save your sites to HTML-Help (CHM)Zip up the WebSave valuable time and money
Capture only the information you want

http://www.spidersoft.com/webzip/downloads.asp

Thanks: Tamil 2000

6.11.08

லால்பேட்டை தொடர் பயான் ஆடியோ

லால்பேட்டை. நவ 07,

லால்பேட்டை நகர ஜமாத்துல் உலமா, புதுபள்ளி ஜமாத்,மற்றும் தீனுல் இர்சாத் நற்பனி மன்றம் சார்பாக 19.10.2008 ல், நடைப்பெற்ற தொடர் பயான்.




மவ்லவி ஹாஃபிழ் அல்ஹாஜ் A. நூருல் அமீன் மன்பஈ
துணை முதல்வர். J.M.A. அரபுக் கல்லூரி லால்பேட்டை
PLAY - பாகம்,1

மவ்லானா மவ்லவி அபுதாஹிர் பாகவிபேராசிரியர் நூருல் இஸ்லாம் அரபி கல்லூரி சேலம்.

PLAY - பாகம்,3


உங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்
Click

5.11.08

லால்பேட்டை ஹாஜி அப்துல் வஹாப் வஃபாத்

லால்பேட்டை சிங்கார வீதி ஹாஜி அப்துல் ரஜாக் அவர்களின் தந்தை ஹாஜி M.A. அப்துல் வஹாப் அவர்கள் இன்று {05 .11.2008} தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நள்ளடக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைப்பெரும்.


தகவல்:

அப்துல் ரஹ்மான்

அபுதாபி

1.11.08

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள்


6. யா அல்லாஹ்! என் மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக! என் வீட்டை எனக்கு நீ விஸ்தீரணப்படுத்துவாயாக! என் உணவில் நீ அருள்புரிவாயாக! கல் நெஞ்சம், பொடுபோக்கு மற்றும் ஏழ்மையிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன். இன்னும் இறைநிராகரிப்பு பாவச்செயல் பிரிவை ஏற்படுத்துதல் மற்றும் பிறர் பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் என்ற முகஸ்துதியிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். செவிடு, குருடு, உறுப்புக்கள் அழுகிவிடும் நோய் இன்னும் கெட்ட (எல்லா) நோய்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.


7. யா அல்லாஹ்! என் உள்ளத்தில் இறையச்சத்தை ஏற்படுத்துவாயாக! அதனைத் தூய்மைப் படுத்துவாயாக! நீயே அதைத் தூய்மைப் படுத்துபவர்களில் மிகச் சிறந்தவன்! அதனுடைய பொறுப்பாளனும், தலைவனும் நீயே! பிரயோஜனம் இல்லாத அறிவு, பயப்படாத உள்ளம், திருப்தியடையாத மனம் மற்றும் ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.


8. யா அல்லாஹ்! நான் செய்த மற்றும் செய்யாத கெட்ட செயல்களிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். யா அல்லாஹ்! உன் அருட்கொடைகள் (என்னைவிட்டு) நீங்குவதை விட்டும், நீ (எனக்கு) அளித்த ஆரோக்கியத்தன்மை (என்னை விட்டு) மாறுவதை விட்டும், உனது திடீர் தண்டனையை விட்டும், உன்னுடைய சகல கோபங்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.


9. யா அல்லாஹ்! இடிந்து விழுந்தோ, உயரத்திலிருந்து கீழே விழுந்தோ, மூழ்கியோ, எரிந்தோ இறப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். மரண நேரத்தில் ஷைத்தான் என்னைத் தீண்டுவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (விஷ ஜந்துக்களால்) கொட்டப்பட்டு இறப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். உள்ளத்தில் முத்திரையிடப்படும் அளவுக்கு பேராசை ஏற்படுவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.


10. யா அல்லாஹ்! கெட்ட நோய்கள், கெட்ட ஆசைகள், கெட்ட செயல்கள் இன்னும் வெறுக்கத்தக்க குணங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். இன்னும் கடன்கள் அதிகரிப்பதிலிருந்தும், மனிதர்களின் ஆதிக்கத்திலிருந்தும், விரோதிகளின் கேலி கிண்டல்களிலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

தொடரும்...


லால்பேட்டை மெயின்ரோடு ஆத்தூர் ஹாஜி முஹம்மது அலி வஃபாத்

லால்பேட்டை மெயின்ரோடு ஆத்தூர் அய்யூப் - அப்துல் ஃபத்தாஹ் இவர்களின் தந்தை ஹாஜி முஹம்மது அலி அவர்கள் இன்று 01 .11.2008 காலை 5.30 மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நள்ளடக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைப்பெரும்.

25.10.08

போலியான விளம்பரங்களைத் தடைசெய்!

எய்ட்ஸ், புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பூரண குணம் பெறும் வகையில் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இன்னும் வெற்றி பெறவில்லை என்றே சொல்லவேண்டும்.

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் அறிவித்துள்ள சிகிச்சை முறைகளை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சில தனியார் வைத்தியசாலைகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவதாக தமிழகத்தில் பரவலாக அடிக்கடி விளரம்பரங்கள் வெளியாகின்றன. இதனை நம்பி சிகிச்சை பெறச் செல்லும் நோயாளிகள் ஏமாற்றமடைய நேரிடுகிறது.

தனியார் வைத்தியசாலைகளில் எத்தகைய மருந்துகள் வழங்கப்படுகின்றன என்பதும், அவை அரசு தரப் பரிசோதனை கூடங்களில் பரிசோதிக்கப்பட்டவையா என்ற விவரமும் நோயாளிகள் அறிந்திட வாய்ப்பில்லை.

இந்நிலையில் போலியான விளம்பரங்களைத் தடைசெய்ய வேண்டுமென அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது.

கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. இத்தகைய விளம்பரங்கள் வெளியாவதற்குத் தடை செய்யும் முயற்சியை மாநில அரசு தீவிரப்படுத்துமா?

நன்றி:அபு ஜுலைஹா

எடை குறைப்பு மாத்திரைகளால் உயிருக்கு ஆபத்து

நவீன வாழ்க்கை முறை, உணவுப்பழக்க வழக்கம், உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் எடை அதிகரித்து உடல் குண்டாகிறது.

இங்கிலாந்து நாட்டில் மட்டும் 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குண்டு உடலை சுமக்க முடியாமல் நடக்கிறார்கள்.

குண்டு உடலை குறைக்க விரும்பும் இவர்கள் கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு எடையை குறைக்கிறார்கள்.

இது போன்ற உடல் எடை குறைப்பு மாத்திரைகள் அபாயகரமானது என்று இங்கிலாந்து டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

ரிமோனாபென்ட் அல்லது அக்கம்பிளியா போன்ற மாத்திரைகளை பயன் படுத்துகிறவர்களுக்கு மன அழுத்தம், மனநல பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.


அது மட்டுமல்ல இது போன்ற மாத்திரைகளை பயன்படுத்துகிறவர்களை தற்கொலைக்கும் துண்டிவிட வாய்ப்பு உள்ளது என்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

இப்போது அந்த மாத்திரைகளுக்கு டாக்டர்கள் தடை விதித்துள்ளனர்.

24.10.08

லால்பேட்டை A.R. அப்துல் ரஷீது அவர்களுக்கு விருது

லால்பேட்டை, அக் 24,

கடந்த 19-10-2008 ஞாயிறு மாலை சென்னையில் தமிழக அரசின்
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் டாக்டர்.T.பெரியான்டவன்
அவர்கள் தலைமையில், திரு C.ராஜ்குமார் திரு A.அமீர்கான்
{புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்}
ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதி
திரு S. கனகராஜ் அவர்கள் பொற்கரத்தால்

லால்பேட்டை A.R. ஃபாரின் எக்ஸ்சேன்ஜ் &
வெஸ்டர்ன் யூனியன் மணிடிரான்ஸ்பர்
உரிமையாளர் A.R. அப்துல் ரஷீது
அவர்களுக்கு தேசிய ஒருமை
பாட்டு கலை பண்பாட்டு கழகமும், மாநில மநித உரிமைகள்
கண்காணிப்பு கழகமும் இணைந்து “ STAR ACHIEVER “விருதும், தங்கப்பதக்கமும்.

வழங்கி கெளரவித்தது. விருது பெற்ற இன்நிறுவனம்
மென்மேலும் சாதனைகள் செய்து மேலும் பல விருதுகள்
பெற வாழ்த்துகின்றோம்.



அன்புடன்

ஏதோ ஒரு தமிழனிடமிருந்து வந்த ஒரு மடல்




இக்கடிதத்தை படித்தபொழுது எனது விழியிலிருந்து என்னையும்அறியாமல் சில கண்ணீர்த்துளிகள் பூமியில்விழுந்தன. ஏதோ ஒரு செப்டம்பர்11 அன்றைக்கு, உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்தசம்பவத்தை இன்னும் மறக்காமல் நாம் விவாதித்துகொண்டிருக்கிறோம். ஆனால் நம் காலடியில்உள்ள தேசத்தில் நம்சொந்தங்களுக்கு தினம் தினம் செப்டம்பர்11 நடந்துகொண்டிருப்பதை நாம் இன்றுவரை கண்டுகொள்ளவில்லை அல்லது கண்டும்காணாததுபோல் இருந்துகொண்டிருக்கிறோம். ஒரு சீக்கியமாணவனின் மயிரைஅறுத்ததற்காக வெகுண்டெழுந்த சீக்கியஇனம்எங்கே, உன்தொப்புள்கொடிஉறவின் உயிரை அறுத்தபின்னும் வாய்மூடி வேடிக்கைபார்க்கும் நம்தமிழ்இனம்எங்கே!!!!!

முழுமையாக படிக்க...

23.10.08

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள்


1. யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும் எனது உலக வாழ்விலும் எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும் நலனையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.
யா அல்லாஹ்! என்னுடைய குறைகளை மறைப்பாயாக!
யா அல்லாஹ்! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத் தருவாயாக! யா அல்லாஹ்! எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலதுபுறமிருந்தும் இடதுபுறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக!
எனக்கு கீழ்புறத்திலிருந்து நான் எதிர்பாராத விதமாகக் கொல்லப்படுவதை உன் வல்லமையைக் கொண்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.

2. யா அல்லாஹ்! எனது உடலில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! எனது செவிப்புலனில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக!
யா அல்லாஹ்! எனது பார்வையில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக!
யா அல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வாகிய உன்னைத் தவிர (வேறு) யாருமே இல்லை. இறைநிராகரிப்பை விட்டும் வறுமையை விட்டும் மண்ணறையின் வேதனையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர (வேறு) யாருமில்லை.
யா அல்லாஹ்! நீயே என் இரட்சகன்! உன்னைத்தவிர வணங்குவதற்குரியவன் வேறு யாருமில்லை.
நீயே என்னைப் படைத்தாய் நான் உன்னுடைய அடிமை நான் என்னால் முடிந்த அளவுக்கு உனது உடன்படிக்கை மற்றும் வாக்குறுதியின் மீது நிலைத்திருக்கிறேன்.
நான் செய்த சகல தீமையைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
நீ எனக்களித்த அருட்கொடைகளைக் கொண்டு உன்பக்கமே நான் மீளுகிறேன். இன்னும் என்னுடைய பாவங்களை (மனமாற) ஒப்புக் கொள்கிறேன்.
எனவே என்னை நீ மன்னித்தருள்வாயாக! உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.
யா அல்லாஹ்! கவலையிலிருந்து (துயரத்திலிருந்து) நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
இன்னும் இயலாமை மற்றும் சோம்பேறித்தனத்திலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகின்றேன்.
இன்னும் கடன் அதிகரிப்பதிலிருந்தும் மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகின்றேன்.
யா அல்லாஹ்! இந்த நாளின் ஆரம்பத்தைச் சீர்திருத்தம் உள்ளதாகவும் அதன் நடுவை வெற்றியுள்ளதாகவும் அதன் கடைசியை லாபம் உள்ளதாகவும் ஆக்கியருள்வாயாக!
அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனே! ஈருலக நலவையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

3. விதியை பொருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் மரணத்திற்குப் பின் குளிர்ந்த (சுவர்க்க) வாழ்வையும், வழிகேட்டின் குழப்பத்திலும் தீய விளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டுவிடாது உன்னைச் சந்திப்பதின் ஆசையையும் உன் திருமுகத்தைப் பார்ப்பதில் அடையும் இன்பத்தையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

நான் யாருக்கும் அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது யாராவது எனக்கு அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது நான் அத்துமீறுவதிலிருந்தும் அல்லது யாராவது என்மீது அத்துமீறுவதிலிருந்தும் அல்லது நீ மன்னிக்காத தவறு மற்றும் பாவங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

4. மிக நீளமான வயது வரை உயிர் வாழ்வதிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்.
நல்ல அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் எனக்கு நீ நேர்வழி காட்டுவாயாக!
அந்த நல் அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் உன்னைத் தவிர வேறு யாரும் நேர்வழி காட்டமுடியாது!
கெட்ட செயல்கள் மற்றும் கெட்ட குணங்களிலிருந்தும் என்னைத் திருப்பிவிடுவாயாக! அப்படிப்பட்ட கெட்ட அமல்கள் மற்றும் கெட்ட குணங்களிலிருந்து உன்னைத்தவிர யாரும் என்னைத்திருப்ப முடியாது!

5. யா அல்லாஹ்! என் மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக!
என் வீட்டை எனக்கு நீ விஸ்தீரணப்படுத்துவாயாக!
என் உணவில் நீ அருள்புரிவாயாக! கல் நெஞ்சம், பொடுபோக்கு மற்றும் ஏழ்மையிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்.
இன்னும் இறைநிராகரிப்பு பாவச்செயல் பிரிவை ஏற்படுத்துதல் மற்றும் பிறர் பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் என்ற முகஸ்துதியிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.
செவிடு, குருடு, உறுப்புக்கள் அழுகிவிடும் நோய் இன்னும் கெட்ட (எல்லா) நோய்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
தொடரும்...

20.10.08

நியூ ஜவுளி ஹால் A/C ஷோரூம் திறப்பு விழா

மன்னை மாநகரில் புதுபொலிவுடன் இன்று திறப்பு விழா கானும் நியூ ஜவுளி ஹால் மென் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகின்றோம்.
அன்புடன்.
லால்பேட்டை இணையதளம்


19.10.08

"STAR ACHIEVER" விருதும்-தங்கப்பதக்கமும் பெறும் லால்பேட்டை நிருவனம்



16.10.08

உலகளாவிய அளவில் முஸ்லிம்களை குறிவைக்கும்: ஆர்.எஸ்.எஸ்

ஐக்கிய அமீரகத்திலுள்ள ஷார்ஜா ஒளிபரப்புச் சேவை (Sharjah broadcasting Channeல்) வெளிநாட்டு இலக்கியங்கள் (Foreign Writings) என்ற பெயரில் ஒளிபரப்பும் நிகழ்ச்சியை நடத்துபவரான ராயத் அமான் என்பவர் இதை வெளிப்படுத்தியுள்ளார்.

டாக்டர். R. சிங் எழுதியுள்ள அனைத்து இந்துக்களும் விழிப்படையுங்கள் (All Hindus Wake up), "இந்துத் தலைவர்களின் உடன்படிக்கைக் குறிப்பேடு" என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகத்தில் மற்றவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் படியான அந்த 13 கட்டளைகள் என்ன? கீழே படியுங்கள்:

1. இஸ்லாமியர்களைக் குறிவைத்து எதிர்மறையான செயல்களை இஸ்ரேல் தொடர்ந்து செய்து வருவதால் அந்நாட்டை இந்துக்கள் மிகவும் நேசமுடைய ஒரு நாடாக கருதவேண்டும்.

2. இயன்றவரையிலான தீய ஒழுக்கங்களையும், நெறிகளையும் இஸ்லாமிய சமூகத்தினரிடையே பரப்பிட வகை செய்ய வேண்டும்.

3. ஹிந்து கோயில்கள் இயன்றவரை அனைத்து இடங்களிலும் நிறுவப்படவேண்டும். ராமரின் உருவச் சிலைகள் பணியிடங்களில் வைக்கப்படல் அவசியம்.

4. இஸ்லாத்திற்கு எதிரான கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படவேண்டும்.

5. இஸ்லாமிய நாடுகளுக்கும், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையேயும் போதைமருந்துகள் விநியோகமும், விபச்சாரமும் பெருமளவு நடைபெற வழிவகை செய்திட வேண்டும்.

6. முஸ்லிம் சமூகத்தினுள் ஊடுறுவிச் சென்று முஸ்லிம் பெண்களுடன் உறவு கொண்டு கருத்தரிக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஹிந்துவாக பிறக்க வைப்பது மிகவும் வலியுறுத்தப்படுகிறது.

7. ஹிந்துவான நீங்கள் ஒரு மருத்துவராக இருக்கும் பட்சத்தில் முஸ்லிம்களுக்கு கருத்தரிப்பதில் சிக்கல் உண்டாக்கிவிட வேண்டும். இயன்றால் பிறவி ஊனமாக்கவும் முயற்சி செய்திடல் வேண்டும்.

8 நீங்கள் ஒரு ஹிந்து நர்ஸ் அல்லது டாக்டராக இருக்கும் பட்சத்தில் பிறந்த முஸ்லிம் குழந்தையின் காதில் ஓம் மந்திரம் ஓதி விட வேண்டும்.9. நீங்கள் ஒரு இஸ்லாமியரின் கடையில் வேலை செய்தால் இயன்ற வரையில் அங்குள்ள பொருள்களை வீணாக்குவது அவசியம்.

10. முஸ்லிம்களுடன் ஒன்று சேர்ந்து நட்புடன் பழகுவதுபோல் நடித்து, முழு நம்பிக்கைக்கு உள்ளானபின்பு அவர்களின் முதுகில் குத்த வேண்டும்.

11. முடிந்தவரை அனைவரையும் முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பி விட முயற்சி செய்திட வேண்டும்.

12. முஸ்லிகளின் வீட்டில் நீங்கள் பணிபுரிபவராக இருப்பின் அவர்கள் மனைவி மற்றும் குழந்தைகளை உங்களின் பால் ஈர்த்து உங்களை அவர்களின் மிகுந்த நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவும், அன்பிற்குரியவர்களாகவும் வைத்திருப்பது மிக அவசியம்.

13. கறுப்பு நிறக் கயிறை உங்கள் மணிக்கட்டில் கட்டிக் கொள்ளுங்கள்.

இவை அனைத்தும் நீண்டகால திட்டங்கள் வகுத்து தற்போது அமோக விளைச்சலைக் கொய்து வரும் ஆர்.எஸ்.எஸ் தனது தொண்டர்களுக்கு அளித்து வரும் பயிற்சியின் ஒருபகுதி என்பது அனைவரும் அறிந்த உண்மை தான்.

ஆனால் அதனை தற்போது புத்தகவடிவில் அச்சடித்து வெளிப்படையாக வினியோகிக்கும் அளவுக்கு அவர்களுக்கு துணிச்சல் வந்திருப்பதற்கு இஸ்லாமிய சமூகத்தின் ஒற்றுமையின்மையும், பிரச்சினையின் வீரியத்தை சமூகம் சரியாக இன்னும் புரிந்து கொள்ளாமையுமே முக்கிய காரணங்களாகும்.

உலகளாவிய அளவில் முஸ்லிம்களை குறிவைத்து உலக வன்சக்திகள் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இஸ்லாமிய நாடுகளில் பணிபுரிந்து தங்களது வருமானத்தை ஈட்டும் பெரும் அளவிலான இந்துக்களிடையில் கூட ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கக் கூடிய இவ்விஷக்கருத்துக்கள் பரப்பப்பட்டு அவர்களுக்கு தொடர்பயிற்சிகள் கொடுக்கப்படுவதை பார்க்கும்பொழுது, முஸ்லிம் சமுதாயம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதோ என்ற அச்சம் மேலிடுவதை தவிர்க்க இயலவில்லை.

தகவல்:
அப்துல்லாஹ்

லால்பேட்டை மெயின்ரோடு ரபியுத்தீன் வஃபாத்

லால்பேட்டை ஏரிக்கரை மெயின்ரோடு அப்துல் ஹலீம் தந்தையும் {ஹோட்டல் தாவூஸ்


} ஜெய்லாபுதீன் சம்மந்தியுமான {சோத்துபானை} ரபியுத்தீன் அவர்கள் இன்று 16 .10.2008 மாலை 7 மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நள்ளடக்கம் 17.10.2008 காலை 10 மணிக்கு நடைப்பெரும்.

5.10.08

லால்பேட்டை வடக்கு தெரு முஹம்மது ஆதம் தாயார் வஃபாத்

லால்பேட்டை வடக்கு தெரு முஹம்மது ஆதம் தாயாரும் {தானாட்ச்சி} ஃபைஜுற்றஹ்மான் மாமியாருமான பல்கிஸ் பீவி அவர்கள் இன்று 05.10.2008 மாலை தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நள்ளடக்கம் 06.10.2008 காலை நடைப்பெரும்.



தகவல்:

சஹாரா டிராவல்ஸ்

லால்பேட்டை

3.10.08

லால்பேட்டை முஹம்மது காஸிம் மகள் வஃபாத்

லால்பேட்டை தோப்பு தெரு {கருத்தாலப்பை} முஹம்மது காஸிம் அவர்களின் மகள் ரஸியா பேகம் இன்று 02.10.2008 மாலை தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


தகவல்:

சஹாரா டிரவல்ஸ்

லால்பேட்டை

பிரிட்டனில் லால்பேட்டை ஜமாத் உதயம்

பர்மிங்கம்: செப் 30,

பிரிட்டனில் லால்பேட்டை ஜமாத் துவக்கம்.

அல்லாஹ்வின் கிருபயால் 30.09.2008 ஈத் பெருநால் அன்று U.K. LALPET JAMAAT, பர்மிங்கத்தில் உள்ள S.M. சாதுல்லாஹ் இல்லத்தில் துவங்கப்பட்டது.
ஜமாத் தலைவராக S.M. சாதுல்லாஹ், செயளாலர் S.M. முஹம்மது பாருக்,பொருளாலர் M.J. பதஹுத்தீன், மற்றும் ஆலோசகர்கலாக V.J. அப்துல் மாலிக்,S.M. அப்துல் இலியாஸ், A. இர்ஷாத் அஹ்மத், V.M. முஹம்மது ஆசிக், V.M. முஹம்மது மதார்,S. முஹம்மது ரியாஸ், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஜமாத்தின் துவக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், சட்டதிட்டங்கள், ஜமாத் மேற்க்கொள்ள இருக்கும் ஆக்கப்பனிகள், ஜமாத் துவக்கப்பட்டதின் நோக்கம், அனைத்தும் இன்ஸா அல்லாஹ் பிரிட்டனில் வாழும் அனைத்து லால்பேட்டை ஜமாத்தினருக்கு கடிதம் மூலம் தெறிவிக்கப்படும்.

மேலும் விபரம் அறிய:
S.M. சாதுல்லாஹ்: 07746465508.
S.M. முஹம்மது பாருக்:07525536779.
M.J. பதஹுத்தீன்:07851009098.

29.9.08

தினமும் 10 ஆயிரம் பேர் களந்துக்கொள்ளும் இஃப்தார் நிகழ்ச்சி

தினமும் 10 ஆயிரம் பேர் களந்துக்கொள்ளும் இஃப்தார் நிகழ்ச்சி:

அபுதபியில் உள்ள மர்ஹும் மண்னர் ஷைஹு ஜாய்த் பள்ளிவாசலில் ரமலான் மாதம் முழுவதும் நடைப்பெரும் இஃப்தார் நிகழ்ச்சியில் தினமும் பல்வேரு நாட்டைசேர்ந்தவர்கள் 10 ஆயிரத்திர்க்கும் அதிகமாநோர் கலந்துக்கொள்கின்றனர். அனைவருக்கும் உனவு வழங்கப்படுகிறது.







தகவல்:
நஜீர் அஹமத்
அபிதபி

28.9.08

இந்த ஆண்டு புனித ஹஜ் செல்ல லால்பேட்டையில் 62 பேர் தேர்வு


லால்பேட்டை: செப் 28


இஸ்லாத்தின் இருதிக்கடமையான ஹஜ் கடமை நிரைவேற்ற லால்பேட்டையில் இருந்து இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலம் 156 பேர் விண்னப்பித்து இருந்தனர். இதில் ஆண்கள் 25 பேர் பெண்கள் 37 பேர் உல்பட 62 பேர் தேற்வு செய்யப்பட்டுள்ளர்கள். மேலும் 10 பேர் மட்டும் காத்திருப்போர் பட்டியலில் உல்லனர். அல்லாஹ் அனைவருடைய ஹஜ் கடமைடயும் அங்கிகரிப்பானாக ஆமீன்.


M.A. ABDUL SALAM,

ARIFA BEGAMM,

.A. ABDUL RAJAK,

UMMUL FAZILA,

HASEENA BEGAMM,

ABDUL MALIK,

INUL JARIYA,

ASHIQ ALI,

KATHIJA BANU,

MASTER NOORUL IBAADH,

JAINULLABUDIN,

Mrs JAINULLABUDIN,

K.S. UBAIDUR RAHMAN,

JAIBUNNISA,

KARI HAZRATH AHMED MOHAMED,

KUDRATHUL INU,

JAWAHARA THUNNISA,

SHAIK OLI,

SALAMATH,

P.M. PACKIR MOHAMED,

SALIHA BEEVI,

MOHAMED YAHAYA,

RAHAMATHUNNISA,

KUDUSIYA BEGAM,

V.Y. MOHAMED ANSARI,

MUMTAJ,

WAFAM,

MOHAMED HANEEF,

MOHATHARUNNISA,

KUTHBUDEEN,

SIRAJUNNISA,

ABDUL WAHAB,

MADINA BEEVI,

ANEESA BEGAM,

M.A.T. ABDUL SAMAD,

SAMSATH BEGAM,

RAHIMA BEEVI,

NAJIRA KANI,

M. MOHAMED FAROOK,

MINHAJ BEGAM,

RIYAJULLAH,

BARAKTHUNNISA,

FATHIMA BEEVI,

MAHABOOB,

JAMAL MOHAMED,

FAIJA BEEVI,

FAJILA BEEVI,

FARIDHA BEEVI,

MOHAMED ISMAIL

ASIYA MARIYAM,

MARIYUL EHSAN,

BASHEER AHMED,

SAIRA BANU,

AMINA BEGAM,

MAJ MOONA BEGAM,

FAZUR RAHMAN,

S.M. MOHAMED AMEEN,

Mrs. HAJIRA BEEVI AMEEN,

------------------------- மானியம் ஆடூர்------------------------

HIDAYATTHULLAH,

Mrs. SALMA BEEVI HIDAYATTHULLAH,
தகவல்
M.A. பத்ஹுத்தீன்
லால்பேட்டை

27.9.08

லால்பேட்டை ஃபஜ்லுத்தீன் அபுதாபியில் வஃபாத்

லால்பேட்டை{ கொளக்குடி} அப்துல் அஜீஸ் மகன் ஃபஜ்லுத்தீன் அவர்கள் இன்று 26.09.2008ல் அபுதாபியில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


தகவல்

அப்துல் ரஹ்மான்

அபுதாபி

அபுதாபியில் லால்பேட்டை ஜமாத் சார்பில் லைலத்துல் கதிர் இரவின் சிறப்பு நிகழ்ச்சி

அபுதாபி: செப் 27,

லால்பேட்டை அபுதாபி ஜமாத் சார்பாக அபுதாபி கால்தியா பள்ளிவாசலில் லைலத்துல் கதிர் இரவின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அபுதாபி லால்பேட்டை ஜமாத் தலைவர் முஹம்மது ஹசன் தலைமை வகித்தார். மவ்லவி ஹபிபுல்லஹ் மன்பஈ கிராத் ஓதி தொடங்கிவைத்தர். மவ்லவி ஹுஸைன் மக்கீ, மவ்லவி கமால் ரஃபியுத்தீன் ரஸாதி ஆகியோர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். ஹாபிழ் இர்சாத் தஸ்ஃபிஹ் சிறப்பு தொழுகை நடத்தினார். இதில் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் கலந்துக்கொன்டு சிறப்பித்தார்கள்.

தகவல்:
S. அப்துர் ரஹ்மான்
அபுதாபி







.