Showing posts with label இம்தாதுல் ஹீசைன் மறைவு. Show all posts
Showing posts with label இம்தாதுல் ஹீசைன் மறைவு. Show all posts

8.3.09

இம்தாதுல் ஹுசைன் அவர்களின் மறைவுக்கு பல்வேறு இடங்களில் இறங்கள் கூட்டம் மற்றும் துஆ மஜ்லிஸ் நடைப்பெற்றது.

லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவரும், சமுதாய பொதுநல ஊழியருமாகிய ஓ.பி. இம்தாதுல் ஹுசைன் அவர்களின் மறைவுக்கு பல்வேறு இடங்களில் இறங்கள் கூட்டம் மற்றும் துஆ மஜ்லிஸ் நடைப்பெற்றது.

லால்பேட்டை முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் மன்றம் சார்பாக இறங்கள் கூட்டம் நடைப்பெற்றது.

சைஹுல் மில்லத் இளைஞர் மன்றம் சார்பாக இறங்கள் கூட்டம் நடைப்பெற்றது.

அபுதாபி லால்பேட்டை ஜமாத் சார்பாக அபுதபியில் துஆ மஜ்லிஸ் நடைப்பெற்றது.

குவைத் லால்பேட்டை ஜமாத் சார்பாக துஆ மஜ்லிஸ் நடைப்பெற்றது.
.

5.3.09

இம்தாதுல் ஹுசைன் மறைவுக்கு லன்டனில் காயிப் ஜனாஸா தொழுகை

லன்டன், மார்ச்.5-
லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவரும், சமுதாய பொதுநல ஊழியருமாகிய ஓ.பி. இம்தாதுல் ஹுசைன் அவர்கள் 04.03.2009 மதியம் 2.45 மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் மஃபிரத் துக்கு துஆ செய்யும் வகையில் லால்பேட்டை ஜமாத்தினர் சார்பாக இங்கிலாந் தலைநகர் லன்டனில் காயிப் ஜனாஸா தொழுகை தாவா சென்டரில் நடைப்பெற்றது.

மவுலவி இப்றாஹிம் உலவி அன்னாரின் மஃபிரத்துக்கு துஆ செய்தார்கள். S.M. அப்துல் இலியாஸ் அவர்கள் இதர்கான ஏற்ப்பாட்டை செய்தார்கள்.

இம்தாதுல் ஹுசைன் காலமானார் தலைவர் பேராசிரியர் இரங்கல்

லால்பேட்டை, மார்ச்.5-

கடலூர் மாவட்டம் லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவரும், சமுதாய பொதுநல ஊழியருமாகிய ஓ.பி. இம்தாதுல் ஹுசைன் சென்னையில் நேற்று கால மானார். அவருக்கு வயது 42.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகால் உருவாக் கப்பட்ட ஓ.பி. இம்தாதுல் ஹுசைன் சிறந்த சமுதாய ஆர்வலர். எம்.ஏ. லத்தீப் கல்வி மற்றும் சமூக அறக் கட்டளையின் அறங்காவ லர். இந்திய தேசிய லீகின் மாநில துணைப் பொதுச் செயலாளராக பொறுப் பில் இருந்தவர்.

உடல் நலம் பாதிக்கப் பட்ட அவர் சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு காலமானார்.

அவரது ஜனாஸா நல்லடக்கம் லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நல்லடக்க நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், லால் பேட்டை ஜமாஅத்தினர், சர்வகட்சியினர் ஏராள மானோர் பங்கேற்றனர்.

தலைவர் பேராசிரியர் இரங்கல்
இம்தாதுல் ஹுசைன் மறைவுக்கு இரங்கல் தெரி வித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
லால்பேட்டை பேரூ ராட்சி தலைவர் ஜனாப் இம்தாதுல் ஹுசைன் திடீரென மரணமுற்ற செய்தி கேட்டு மிகவும் துக்கமும் - வருத்தமும் அடைந்தோம்.

சமூக சேவையில் லால் பேட்டை மக்களின் நன் மதிப்பை பெற்று விளங்கி னார். லால்பேட்டை பேரூ ராட்சி சிறந்த பேரூராட்சி என்று பெயர் பெற்று விருதும், பாராட்டும் பெறு வதற்கு இவரின் நிர்வாகத் திறமை அமைந்திருந்தது.

தேசிய லீகில் இவர் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார் என்றா லும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகால் வளர்க்கப் பட்டவர் என்பது குறிப் பிடத்தக்கது.

நல்ல சகோதரர் மறை வால் வாடும் அவரது குடும் பத்தாருக்கு நமது அனுதா பங்களையும், இரங்கலை யும் தெரிவிப்போம்.

அன்னாரின் மஃபிரத் துக்கு எல்லோரும் துஆ இறைஞ்சுவோம்.
இவ்வாறு பேராசிரியர் இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளார்.

நன்றி மணிச்சுடர்.

4.3.09

லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் ஓ.பி. இம்தாதுல் ஹீசைன் மறைவு

லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் ஓ
.பி. இம்தாதுல் ஹீசைன் மறைவு
லால்பேட்டை பேரூராட்சி மன்றத்தின் துனைத்தலைவராக
5 வருடங்கள், பேரூராட்சி மன்றத்தி்ன் தலைவராக 3 வருடங்கள் சறிப்பாக பணியாற்றிய இயக்க இளவல் ஓ.பி. இம்தாதுல் ஹீசைன் அவர்கள் 04.03.2009 புதன் கிழமை 2.45 மனியளவில் தாருல் ஃபனாவை விட்டு தாருல் பகாவை சென்றடைந்தார் என்பதை கேட்டு பெரும் கவலையடைந்தோம்.

மறைந்த சகோதரர்
ஓ.பி. இம்தாதுல் ஹீசைன் சின்னஞ்சிறு வயதில் இருந்து சமுதாயப்பணியிலும், தாய்ச்சபை இந்திய யூனியன் முல்லிம் லீக் பணியிலும் சிறப்பாக செயல்பட்டார். லால்பேட்டை வடக்குத் தெருவில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றத்தில் செயலாளராக இருந்து சிறப்பாக பணிபுறிந்தார்.

60 ஆன்டுகாலமாக லால்பேட்டை நகரில் ரபிவுல் அவ்வல் மாதத்தில் நடைபெற்று வரும் நபிகள் பெருமானார் ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் சீரத்துன் நபவி வரலாற்று சொற்பொழிவு நிகழ்ச்சி சங்கை மிகு உலமாக்களை வைத்து நடத்தப்படுகிறது. 60 ஆன்டுகலாக சிறப்பாக நடைபெற்று வரும் இந்த நிகழச்சியில் 20 ஆன்டுகளுக்கும் மேலாக சிறப்பாக சேவையாற்றியவர் சகோதரர் ஓ.பி. இம்தாதுல் ஹீசைன் அவர்கள்.

லால்பேட்டை நகர முஸ்லிம் லீக் இளைஞர் அணியின் செயலாளர்
, நகர முஸ்லிம் லீக்கின் துனை செயலாளர், மாவட்ட முஸ்லிம் லீக்கின் செயற்குழு உறுப்பினராக பணியாற்றினார். தேசிய லீக்கின் லால்பேட்டை நகர தலைவராகவும், மாநில பொருளாலராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். ஈடு செய்ய முடியாத இழப்பாக இவரது மறைவுச் செய்தி கேட்டதும் லால்பேட்டை வட்டாரமே கவலையில் ஆழ்ந்தது.

லால்பேட்டையில் இன்று வியாழன் அனைத்து பாடசாலைக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இவருடைய கப்ரை அல்லாஹீத்தாலா பிரகாசமாக்கி வைப்பானாக.

இவருடைய மறைவால் கவலையில் ஆழந்திருக்கும் இவருடைய குடும்பத்தார், நன்பர்கள், இயக்கத்தினர் அனைவருக்கும் ஸப்ரே ஜமீலை அல்லாஹ் வழங்குவானாக.

இவரின் மறைவுச் செய்தி கேட்டதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச் செயலாலரும், தமிழகத் தலைவரும் ஆன பேராசிரியர் கே.எம். காதர் முகைதீன் அவர்கள் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.
.

.