Showing posts with label மணிச்சுடர். Show all posts
Showing posts with label மணிச்சுடர். Show all posts

5.3.09

இம்தாதுல் ஹுசைன் காலமானார் தலைவர் பேராசிரியர் இரங்கல்

லால்பேட்டை, மார்ச்.5-

கடலூர் மாவட்டம் லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவரும், சமுதாய பொதுநல ஊழியருமாகிய ஓ.பி. இம்தாதுல் ஹுசைன் சென்னையில் நேற்று கால மானார். அவருக்கு வயது 42.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகால் உருவாக் கப்பட்ட ஓ.பி. இம்தாதுல் ஹுசைன் சிறந்த சமுதாய ஆர்வலர். எம்.ஏ. லத்தீப் கல்வி மற்றும் சமூக அறக் கட்டளையின் அறங்காவ லர். இந்திய தேசிய லீகின் மாநில துணைப் பொதுச் செயலாளராக பொறுப் பில் இருந்தவர்.

உடல் நலம் பாதிக்கப் பட்ட அவர் சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு காலமானார்.

அவரது ஜனாஸா நல்லடக்கம் லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நல்லடக்க நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், லால் பேட்டை ஜமாஅத்தினர், சர்வகட்சியினர் ஏராள மானோர் பங்கேற்றனர்.

தலைவர் பேராசிரியர் இரங்கல்
இம்தாதுல் ஹுசைன் மறைவுக்கு இரங்கல் தெரி வித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
லால்பேட்டை பேரூ ராட்சி தலைவர் ஜனாப் இம்தாதுல் ஹுசைன் திடீரென மரணமுற்ற செய்தி கேட்டு மிகவும் துக்கமும் - வருத்தமும் அடைந்தோம்.

சமூக சேவையில் லால் பேட்டை மக்களின் நன் மதிப்பை பெற்று விளங்கி னார். லால்பேட்டை பேரூ ராட்சி சிறந்த பேரூராட்சி என்று பெயர் பெற்று விருதும், பாராட்டும் பெறு வதற்கு இவரின் நிர்வாகத் திறமை அமைந்திருந்தது.

தேசிய லீகில் இவர் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார் என்றா லும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகால் வளர்க்கப் பட்டவர் என்பது குறிப் பிடத்தக்கது.

நல்ல சகோதரர் மறை வால் வாடும் அவரது குடும் பத்தாருக்கு நமது அனுதா பங்களையும், இரங்கலை யும் தெரிவிப்போம்.

அன்னாரின் மஃபிரத் துக்கு எல்லோரும் துஆ இறைஞ்சுவோம்.
இவ்வாறு பேராசிரியர் இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளார்.

நன்றி மணிச்சுடர்.

.