10.9.10

லால்பேட்டை நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடிஏற்று விழா

லால்பேட்டை பேருந்து நிலையம் காயிதே மில்லத் சாலையில் இன்று நோன்பு பெருநாள் காலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடி ஏற்று விழா நடைப்பெற்றது.

 இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி கே.ஏ.அமானுல்லா தலைமை வகித்தார் மாநில செயலாளர் மௌலானா தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் மாவட்ட ஆலோசகர் எஸ்.ஏ.அப்துல் கப்பார் முபாரக் மஸ்ஜித் முத்தவல்லி எம்.ஹச் .அப்துஸ்ஸலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 லால்பேட்டை நகர தலைவர் ஹாஜி.கே.ஏ.முஹமத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியினை தக்பீர் முழக்கத்துடன் ஏற்றி வைத்தார் நகர செயலாளர் எம்.ஒ. அப்துல் அலி வரவேற்றார் நகர பிரமுகர் பி.எம்.முஹமத் தைய்யுப் நன்றி தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் சவுதி காயிதே மில்லத் பேரவை செயலாளர் எஸ்.எம்.முஹமத் நாசர் ,சிங்கை எம்.ஏ ஹஜ்ஜி முஹமத்,பி.எம்.மஸ்வூத் ,பேரூராட்சி உறுப்பினர் எஸ்.ஏ.ஹிதயதுல்ல,துணைச்செயலாளர்களான ஏ.தாஹா முஹமத் ஏ.முஹமத் தையுப் நகர மாணவர் அணி அமைப்பாளர் யு.சல்மான் பாரிஸ் ,எம்.ஏ.அப்துல் ஹமித் , எஸ்.ஏ.முஹிபூர் ரஹ்மான் ஏ.எஸ்.அஹமத் உள்ளிட்ட முஸ்லிம் லீக் செயல் வீரர்கள் பங்கேற்றனர்.

0 comments:

.