Showing posts with label லைலத்துல் கத்ர். Show all posts
Showing posts with label லைலத்துல் கத்ர். Show all posts

1.9.10

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் புனித மிகு லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி

அல்லாஹ்வை வணங்கி வாழ்வோம்! இல்லாதோருக்கு வழங்கி வாழ்வோம்! எல்லோருடனும்


இணங்கி வாழ்வோம்!!



அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் புனித மிகு லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி


அன்புடையீர்!அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1431-ரமளான் பிறை 27- 05.09.2010.ஞாயிறு மாலை திங்கள் இரவு தராவீஹ் தொழுகைக்குப் பிறகு (சரியாக 9.30 மணிக்கு) அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பாக புனித மிகு லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி அபுதாபி காலிதியா செரட்டான் ஹோட்டல் பின்புறம் உள்ள மஸ்ஜிதே ”அபு உபைதா” வில் நடைபெற உள்ளது.

அது சமயம் சிறப்பு பயான்,தஸ்பீஹ் தொழுகை,ஹத்தமுல் குர்ஆன் மற்றும் சிறப்பு துஆ ஆகியவைகள் நடைபெற உள்ளதால்,தாங்கள் மற்றும் தங்களின் சுற்றத்தார்கள் நண்பர்கள் அனைவரும் இந்நிகச்சியில் கலந்து சிறப்பித்து பயன் பெற வேண்டுமென அனைவர்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.



சிறப்பு பயான்: மெளலவி ஹாபிழ் ஹுஸைன் மக்கி மஹ்லரி {காயல்பட்டினம்}



தஸ்பீஹ் சிறப்பு தொழுகை: ஹாபிழ் .இர்ஷாத் அஹமத்  {லால்பேட்டை}





இப்படிக்கு

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்



குறிப்பு:

தாங்கள் அனைவர்களும் ஸதகத்துல் ஃபித்ர்-ஐ நமது ஜமாஅத்தில் செலுத்தி நமதூர் சகோதர சகோதரிகள் பயன் பெற உதவிடுமாறு அன்போடு கேட்டிக் கொள்ளப்படுகிறது

*பெண்களுக்கு தனி இட வசதி உள்ளது

துஆவிற்க்கு பிறகு ( நிகழ்ச்சி முடிவில்) சீரணி உணவு வழங்கப்படும்.

17.9.09

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் நடைபெற்ற புனிதமிகு லைலத்துல் கத்ர் நிகழ்ச்சி

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் நடைபெற்ற புனிதமிகு லைலத்துல் கத்ர் நிகழ்ச்சி (நேன்பு பிறை-27) 16.09.2009 புதன் மாலை வியாழன் இரவு சரியாக இரவு 10.00 மணிக்கு அபுதாபி காலிதியா ஷெரட்டான் பின்புரம் உள்ள மஸ்ஜித் அபு உபைதா-வில் ஜமாஅத்தின் கௌரவ தலைவர் ஹாஜி T.A. முஹம்மது ஹஸன் அவர்கள் தலைமையில் துவங்கி, கிராஅத் ஹாபிழ் M. இர்ஷாத் ஓதி நிகழ்ச்சி துவக்கப்பட்டது.

வரவேற்புரை ஜமாஅத்தின் கௌரவ தலைவர் M. முஹம்மது சுஐபுதீன் நிகழ்த்த, சிறப்பு பேச்சாளர்கள் லால்பேட்டை மௌலவி ஹபீபுல்லாஹ் ஆலிம் மற்றும் காயல் பட்டினம் மௌலவி ஹாபிழ் ஹாஜி காஜா முஹையதீன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

அதுசமயம் நமதூர் சகோதரர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த கோதரர்கள் மற்றும் ஏராளமானவர்கள் திரளாக வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

பயானுக்கு பிறகு ஹத்தம்அல் குர்ஆன், யாசீன், தஸ்பீஹ் தொழுகை மற்றும் துஆ ஹாபிள் M. இர்ஷாத் அவர்கள் நிகழ்த்த இறுதியாக நன்றியுரை ஜமாஅத்தின் துணை தலைவர் S.M. அப்துல் அஜீது அவர்கள் வழங்கிய பின் நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் ,
தகவல்: A. இன்ஆமுல் ஹக் - அபுதாபி

லால்பேட்டையில் லைலத்துல் கத்ர் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு பயான்!

லைலத்துல் கத்ர் இரவை முன்னிட்டு லால்பேட்டையில் அமைந்துள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு பயான்கள் நடைபெற்றது.

பாரம்பரிய முறைப்படி அனைவரும் புத்தாடைகள் அணிந்தும்,சிறப்பு தொழுகை மற்றும் திக்ர் போன்ற அமல்களிலினால் அனைத்துப் பள்ளிகளும் நிறைந்து காணப்பட்டது.

ஒரு சில தினங்களில் பெருநாள் வருவதையொட்டி அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

அனைத்துப் பள்ளிகளும் விடுமுறை விடப்பட்டதால் ஊர் முழுவதும் சிறுவர்களும்,இளைஞர்களும் மகிழ்ச்சியோடு வலம் வருகின்றனர்.

அனைவரும் மகிழ்வாக பெருநாளை கொண்டாட அல்லாஹ் அருள்வானாக!

.