Showing posts with label சுதந்திர போராட்டத்தில் இஸ்லாம். Show all posts
Showing posts with label சுதந்திர போராட்டத்தில் இஸ்லாம். Show all posts

8.7.10

இந்திய சுதந்திர போராட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் பங்கு – ஓர் ஆய்வு


இந்திய சுதந்திர போராட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் பங்கு – ஓர் ஆய்வு



( டாக்டர் ஏ. அக்பர் ஹுசைன், வரலாற்றுத்துறை விரிவுரையாளர் )



இந்தியாவின் விடுதலைப் போரில் இஸ்லாமியரின் பங்கு மகத்தானது. நாடெங்கிலும் நடந்த ஆங்கிலேயரின் அடக்குமுறையில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் அல்லுற்றனர்.



காந்தி அடிகளின் அறைகூவலை ஏற்று சுதந்திர வேள்வியில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட இஸ்லாமியர்கள் ஏராளம். 17.08.1920-ல் காந்தியடிகள் மெளலானா சவுகத் அலியுடன் கிலாபத் இயக்கப் பிரச்சாரத்திற்காக இந்நகருக்கு வருகை தந்தார். இம்மாவட்டத்தின் கிலாபத் இயக்கத்தின் செயலாளர் வி.எஸ். முகம்மது இப்ராஹீம் தமிழிலும், டாக்டர் அப்துல் கபான் இந்துஸ்தானியிலும் வரவேற்புப் பத்திரம் படித்து அளித்தனர்.

.