27.2.09

அல்ஜமா பைத்துல்மால் வேண்டுகோள்

அன்புடையீர்

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்)

அல்லாஹ்வின் பெருங்கருணையினாலும் நபிகள் (ஸல்) அவர்களின் நல்லாசியாலும் நமதூரில் அல் ஜமா இஸ்லாமிய பைத்துல் மால் என்ற சிறப்பு நிதி அமைப்பு அமீரகத்தில் வாழும் நமதூரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கருணை உள்ளம் கொண்ட சகோதரர்களைக் கொண்டு அல்லாஹ்வின் பெருங்கருணையினால் 2002 ஆண்டு தொடங்கப்ப்ட்டு நமதூரில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் வட்டியில்லா கடன் பெற்று பயன் அடைந்து வருகின்றனர்.

இப்பணியினை வெற்றிகரமாக நடத்துவதற்காக நமதூரில் அனைத்து தரப்பிலுமுள்ள நம்பிக்கையுள்ள சகோதரர்களையும் உலாமாக்களையும் இணைத்து அதன் மூலம் செயல் திட்டங்களையும் வரைமுறைகளையும் உருவாக்கி சிறப்பான முறையில் வெற்றிகரமாக நடந்து வருகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் அல் ஹம்துலில்லாஹ்.

இப்பனியின் சிறப்பை அறிந்த சில தணவந்தர்களும் சவூதி அரேபியாவில் உள்ள நம் சகோதரர்களும் பொறுளுதவியும் நன்கொடையும் வழங்கியுள்ளனர். மேலும் சிலர் தங்களின் சேமிப்பில் வட்டியை தவிப்பதர்காக வைப்பு நிதியாகவும் இட்டு இதன் வளர்ச்சிக்கு உதவி வருகின்றனர்.

நமதூரின் ஏழை எளிய மக்களின் தேவைக்கு இச்சிறிய தொகை மிகவும் குறைவானது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும் இவ்வமைப்பானது எந்த ஒரு லாப நோக்கையும் கருதி நடத்தப்படாததால் இதற்குண்டாகும் அன்றாட சிலவுகள். வாடகை. ஊழியர்கள் சம்பளம் மற்றும் காகிதப் பொருள்களின் தேவைகளை நன்கொடைகள் மூலமாகத்தான் செய்யவேண்டியுள்ளது. அதனால் தங்கள் பகுதியில் வழும் நமதூர் சகோதரர்களை நாடி இப்புனிதப் பணி தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபெற ஆவன செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.

நம் ஒருமித்த ஒத்துழைப்புக்கு வல்ல நாயன் நற்கூலி தந்தருள்வானாக ஆமீன்.


அல் ஜமா இஸ்லாமிக் பைத்துல் மால்
அமைப்புக்குழு
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

18.2.09

''----தமிழக அரசுக்கு லால்பேட்டை நகர தி மு க, இ யூ மு லீக் நன்றி


மாநில ஜமாஅத்துல் உலமா நன்றி

தன்னலம் கருதாமல் சமுதாயப் பணியாற்றி வருகின்ற உலமாக்களுக்கும் - பள்ளிவாசல்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கும் நல வாரியம் அமைக்கப்படும் என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை வரவேற்கிறது.

சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று நல வாரியம் அமைத்துள்ள மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமையி லான தமிழக அரசுக்கும், இதற்காக முயற்சித்த அனைவருக்கும் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறது என்று அதன் மாநிலத் தலைவர் லால்பேட்டை மவ்லானா ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் ஹஸரத் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
.

11.2.09

லால்பேட்டை பேருராட்சி மன்ற தலைவர் O.P. இம்தாதுல் உசேன் மருத்துவனையில் அனுமதி

அஸ்ஸலாமு அலைக்கும், லால்பேட்டை பேருராட்சி மன்ற தலைவரும் எங்களின் அன்பு நனபருமான O.P. இம்தாதுல் உசேன் அவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர் விரைவில் பூரண நலம் பெறவேண்டி அனைவர்களும் இறைவனிடம் துஆ செய்யவேன்டுகிறோம்.
.

லால்பேட்டை கொல்லிமலை ஹாஜி அப்துர்ரஹ்மான் வஃபாத்

லால்பேட்டை கொல்லிமலை நேரு வீதி R.A. அமானுல்லா அவர்களின் தந்தை ஹாஜி R.B. அப்துர்ரஹ்மான் அவர்கள் இன்று {09 .02.2009} தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்

சஹாரா டிராவல்ஸ்

10.2.09

தாஜுத்தீன் தாயார் வஃபாத்

லால்பேட்டை மதினா தெரு { தாஜ் ஜுவல்ளரி } தாஜுத்தீன்,நஜ்முத்தீன் ஆகியோரின் தாயாருமான ஹாஜியா ஃபஜிலா பேகம் அவர்கள் இன்று {09.02.2009} தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


தகவல்

சஹாரா டிராவல்ஸ்

.